செல்லுபடியாகும் ரெசிடென்சி விசா, வேலைக்கான விசா, விசிட் விசா, எக்ஸிட்
மற்றும் ரீ என்ட்ரி விசா மூலமாக மக்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல்
சவூதி திரும்பலாம் என சவூதி உட்கட்டமைப்புத்துறை சமீபத்தில் அறிவித்திருந்தது. இதன்படி சவூதியின் சர்வதேச விமான நிலையங்கள் கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் மீண்டும் பணிக்குத் திரும்பிவருகின்றன.
இந்நிலையில், சவூதிக்கு வரும் மற்றும் சவூதியிலிருந்து
வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் அரசு விதித்திருக்கும் கொரோனா
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமுடன் பின்பற்றவேண்டும் என சவூதி விமானப்
போக்குவரத்து தலைமை இயக்குனரகம் (GACA) தெரிவித்திருக்கிறது.
சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் அரசின் பிற துறைகளின் வழிகாட்டலின்படி
சவூதியின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் மக்கள் பயன்பாட்டிற்கு
திரும்பியிருப்பதாக GACA தெரிவித்திருக்கிறது என சவூதி பத்திரிக்கை முகமை
தகவலளித்திருக்கிறது.
சவூதி திரும்புவோர், 3 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள
வேண்டும். அதேபோல சவூதிக்கு வந்த 48 மணி நேரம் கழித்து மீண்டும் கொரோனா PCR
பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தி, தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை பயணிகள்
தெளிவுபடுத்தவேண்டும்.
சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் பயணிகளுக்கான விதிமுறைகள் புதுப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்கள் தங்களது பயண விதிமுறைகளை பயணிகளுக்கு எடுத்துரைக்க
வேண்டும் எனவும் GACA தெரிவித்திருக்கிறது. அதேபோலவே சவூதியிலிருந்து
வெளிநாடு செல்லும் மக்கள், தாங்கள் செல்லும் நாடு விதித்திருக்கும் பயண
விதிமுறைகளை கவனமாகப் பின்பற்றவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments