உலகையே அச்சுறுத்தி வரும் கொரோ வைரஸிற்கு மருந்துகள் கண்டுபிடிக்காமல்
திணறிக்கொண்டிருக்கும் நிலையில், பலர் தங்களது மருந்துகள் கொரோனாவைக்
குணப்படுத்தும் என்று அவ்வப்போது கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை தொட்டிபாளையம் பகுதியில் இயங்கி வரும் நெல்லை லாலா
ஸ்வீட் கடை, 19 மூலிகைகள் கொண்டு சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட
மூலிகை மைசூர்பா கொரோனாவை ஒரே நாளில் குணப்படுத்தும் என நோட்டீஸ் அடித்து
விநியோகம் செய்து வருகிறது.
கோவை சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர், வெள்ளலூர் ஆகிய பகுதிகளில்
கொரோனா அறிகுறி இருந்தவர்கள் இந்த மூலிகை மைசூர்பா சாப்பிட்டு அதன் மூலம்
ஓரிரு நாட்களில் அவர்கள் குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய தாத்தா சித்த மருத்துவத்தின் கற்றுக் கொடுத்த சில வழிமுறைகளை
பின்பற்றி இந்த மூலிகை மைசூர்பாவை தயார் செய்துள்ளதாகவும், 19 வகையான
மூலிகை பொருட்களை கொண்டு இந்த மைசூர்பா தயார் செய்யப்பட்டுள்ளதாகவும்
அக்கடையின் உரிமையாளர் ஸ்ரீ ராம் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரித்து விரைவில் கொரோனா தொற்றில் இருந்து விடுபடலாம் எனவும், பக்க
விளைவுகள் எதுவும் இதில் இல்லை எனவும் தெரிவித்துள்ள அவர், கொரோனா
பாதிக்கப்பட்ட அல்லது அறிகுறிகள் இருப்பவர்கள் எங்களுக்கு
தெரியப்படுத்தினால் வீடு வீடாக சென்று இலவசமாக மைசூர்பாவை விநியோகம் செய்ய
தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு விரும்பினால் பிரதமர் மோடியிடம் இதற்கான ஃபார்முலாவை
இலவசமாக தர தயாராக இருப்பதாகவும், மத்திய அரசு மூலம் வெளிநாடுகளுக்கு
விலைக்கு விற்று, 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல் கலாமின்
கனவு நிறைவேற துணை நிற்போம் எனவும் அந்த நோட்டீஸில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments