Subscribe Us

header ads

Counting Increased : குவைத் மற்றும் UAE இல் இருந்து வருகை தந்த 5 பேருக்கு கொரோனா


இலங்கையில் மேலும் 5 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2459 ஆக அதிகரித்துள்ளது. 

குவைத்தில் இருந்து வருகைதந்த ஒருவரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 4 பேருமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1980 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

தற்போது, 468 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Post a Comment

0 Comments