Subscribe Us

header ads

(Breaking News) சவுதி அல் அஹ்ஸாவில், அல் ஷுபா 5 இளம் வயதினர் கொலை

சவூதி கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய கவர்னரேட்டான அல் அஹ்ஸாவில், அல் ஷுபா அருகில் உள்ள புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், ஒரு பல்கலைக்கழக மாணவர் மற்றும் 14 முதல் 22 வயதுக்குட்பட்ட அவரின் நான்கு சகோதரிகள் என 5 பேர் கொல்லப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

“இந்தக் குற்றத்தின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதைக் கண்டறிய திறமையான அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.” என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

ஓகாஸ் (Okaz) செய்தி நிறுவனத்திடம் பேசிய பாதிக்கப்பட்டவர்களின் உறவினரான, இஸ்மாயில் கலீஃபா அல் சலேஹ், மரணமடைந்த குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அல் அஹ்ஸா மாகாணத்தின் அல் ஷுபா பகுதியில் உள்ள தங்களது புதிய குடியிருப்பைக் காணச் சென்றபோது இந்தக் குற்றம் நடந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும், “பெற்றோர் தங்கள் குழந்தைகளைக் குடியிருப்பில் விட்டுவிட்டு சந்தைக்குச் சென்றிருக்கின்றனர். மாலையில் வீடு திரும்பிய அவர்கள் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் யாரும் திறக்கவில்லை. கதவு உள்ளிருந்து தாழிடப்பட்டிருந்தது. பலமுறை முயன்ற பிறகு சந்தேகமடைந்த குழந்தைகளின் தந்தை கதவை பலவந்தமாகத் திறந்து பார்த்த போது, அவர்கள் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. குழந்தைகளின் தந்தை உடனேயே காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.” என்று அவர் கூறியுள்ளார்.

குற்றம் நடந்த இடத்திலிருந்து இரத்த மாதிரிகள், கைரேகைகள் மற்றும் பிற ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு, இறந்தவர்களின் உடல்கள் தடயவியல் மருத்துவத் துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கை பொது வழக்கு விசாரணையில் சமர்ப்பிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments