இந்த ஆண்டு ஹஜ்ஜின் போது, ஜூலை 19 முதல் துல்ஹஜ் 12 வது நாள்(ஆகஸ்ட்
02) வரை அனுமதி இல்லாமல் மினா, முஸ்தலிஃபா மற்றும் அராபத் ஆகிய புனித
தளங்களுக்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. முதல்முறை விதிமுறைகளை
மீறுபவர்களுக்கு 10,000 சவூதி ரியால்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும்,
விதிமீறல் தொடர்ந்தால் அபராதம் இரட்டிப்பாகும் எனவும் சவூதி உள்துறை
அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஹஜ் பருவத்தின் போது கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான
விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு புனித யாத்திரையின் போது பாதுகாப்பு வழிமுறைகளைத் தவறாமல்
பின்பற்றும்படி அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கும்
அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில்
விதிமீறல்கள் நிகழாமல் தடுக்கவும், அனுமதி இல்லாமல் உள்ளே நுழைபவர்களைத்
தடை செய்யவும், புனிதத் தளங்களை நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகள் மற்றும்
பாதைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்க வேண்டும் என்றும்
வலியுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பொருளாதாரத் தடைகள்
விதிக்கப்படும் என சவூதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
0 Comments