அரச ஊழியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பது அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பு மற்றும் கடமையாகும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களை பழிவாங்கும் யுகத்தை நாட்டில் மீண்டும் ஏற்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மொறட்டுவையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எனது அரசாங்கமே அரச ஊழியர்களை பாதுகாத்தது. இதன் காரணமாகவே கொரோனா வைரஸை இந்தளவுக்கு கட்டுப்படுத்த முடிந்தது.
அரச ஊழியர்களின் எதிர்காலம் ஐக்கிய தேசியக் கட்சியல்ல. போரை முடிவுக்கு கொண்டு வந்து ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி இடையில் நின்று போனது.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, கடந்த அரசாங்கம் தேவையற்ற அழுத்தங்களை கொடுத்தது எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் முதல் கட்ட தபால் மூலம் வாக்களிப்பு இன்று ஆரம்பமாகி உள்ளது. முப்படையினர், பொலிஸார் மற்றும் அரச ஊழியர்கள் மாத்திரமே தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments