உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணிகளுக்கான நெறிமுறைகள் குறித்த
புதுப்பிக்கப்பட்ட தகவலை சவுதி சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவை
ஊழியர்கள், பயணிகள் மற்றும் குழு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை
வழங்க உதவும்.
விமானத்தின் உள்நுழைவு – உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் கடைபிடிக்க வேண்டியவை
ஒவ்வொரு பயணிக்குமிடையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சமூக இடைவெளியை
[குறைந்தது ஒன்றரை மீட்டர் தூரம்] பேணவும். விமான பயணத்தின் போது,
அவசரசிகிச்சை யாருக்கேனும் தேவைபட்டால் அதனை சமாளிக்கும் வகையில் சில
இருக்கைகளை மாற்றி அமைத்தல்.
குடும்பமாக வரும் பயணிகள் ஒன்றாக அமர்ந்து பயணிக்கும் வகையில் முன்கூட்டியே இருக்கைகளை முன்பதிவு செய்ய வேண்டும்.
விமான பயணங்களின் போது உணவு வழங்கப்படும்.
விமான பயணத்தின் போது, (வரி இல்லாத) விற்பனைகள் அனுமதிக்கப்படும்.
ஒவ்வொரு
விமான பயணத்திற்கும் பிறகு பயணிகள் பகுதி கிருமிநாசினி கொண்டு சுத்தம்
செய்தல் போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு
பயன்பாட்டிற்கு பிறகும் கழிப்பறைகளை சுத்தம் செய்தல் மற்றும், ஒருமுறை
மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையிலான இருக்கைகளை வழங்குதல்.
ஒவ்வொரு பயணத்திற்கு பிறகும் அனைத்து அச்சிடப்பட்ட பிரதிகள் மற்றும் பத்திரிகைகளை அகற்றவும்.
விமானத்தில் தொழுகைக்கான இடம் ஒதுக்கப்பட்டிருப்பின் அதனை தற்போது பயன்படுத்த அனுமதியில்லை.
நோய்த்
தொற்று இருப்பதாக சந்தேகிக்கும் வகையிலான நபர்கள் யாரேனும் பயணித்தால்,
அவர்களுக்காக தனிமைப்படுத்தப்பட்ட இருக்கைகளை வழங்குதல்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணிகளுக்கான நெறிமுறைகள்
பயணிகள்
ஒவ்வொரு பயணிகளுக்கும் மாஸ்க் போன்ற தனிப்பட்ட சுகாதாரப் பொருட்களை வழங்குதல்.
அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பிருந்து, பயணம் முழுவதும் முகமூடி அணிந்திருக்க வேண்டியது அவசியம்.
விமான
நிலையத்தில் வைத்தோ அல்லது விமானத்திலிருந்து வெளியேறும் பொழுதோ, அதிக
உடல் வெப்பநிலை அல்லது சுவாச தொற்று அறிகுறிகளைக் கொண்ட பயணிகள் யாரையும்
கண்டறிந்தால், அவர்களுக்கு உதவும் வகையில், அவர்களின் தகவல்களை உடனடியாக
தொற்றுநோயியல் கட்டுப்பாட்டு மையத்தில் புகாரளிக்கவும். அல்லது, 937 என்ற
எண்ணிற்கு தொடர்பு கொண்டு அந்த நபரை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றவும்.
விமான பணி குழுவினர்
பயணிகளுக்கு சேவைகளை வழங்குவதற்கு முன்பு பணிக்குழு உறுப்பினர்கள் தங்கள் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
அனைத்து
பணிக் குழு உறுப்பினர்களும் கையுறைகள் மற்றும் முகமூடிகளை அவசியம் அணிய
வேண்டும். மேலும், கையுறைகளை அணியும்போது வாய், மூக்கு மற்றும் கண்களைத்
தொடுவதைத் தவிர்க்கவும்.
அதிக காய்ச்சல் அல்லது சுவாச அறிகுறிகள்
(இருமல் அல்லது மூச்சுத் திணறல்) உள்ள ஊழியர்கள் மற்றும் கேபின் குழுவினர்
குறித்து உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். விதிமுறைகளின்
படி, கோவிட் -19 நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் சம்பந்தப்பட்ட
தகவல் மற்றும் தொடர்பு எண்களைப் பதிவுசெய்து உடனடியாக தொற்றுநோயியல்
கண்காணிப்பு மையத்தில் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். அல்லது 937 என்ற
எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்.
இராஜ்ஜியத்திற்கு வெளியில் இருந்து வருபவர்கள் குறித்து சுகாதார அமைச்சகத்தின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
கண்காணித்தல் மற்றும் புகாரளித்தல்
ஊழியர்களின் முந்தைய பயணங்கள் மற்றும் சுகாதார நிலை குறித்த
விரிவான தினசரி பதிவைத் தயாரிக்கவும். (தனிமைப்படுத்தப்பட்ட பணியாளர்களின்
பட்டியல் உட்பட).
ஒன்றாக வேலை செய்யும் ஊழியர்களின் பட்டியல், அவர்களின் வேலை நேரம் மற்றும் பணி புரியும் தேதிகள் குறித்த பட்டியலை தயாரிக்கவும்.
சுகாதார
பணி தொடர்பான கணக்கெடுப்புகளை நடத்துவதன் மூலம் சுகாதார அபாயங்களை
கண்டறிதல் [அவற்றை நீங்கள் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ
இணையதளத்தில் காணலாம்].
COVID 19 நோய் குறித்து சுகாதார அமைச்சகம் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
வெப்பநிலை
சோதனை நடத்தப்படுவதை உறுதிசெய்து, ஊழியர்கள், பயணிகள் அல்லது குழு
உறுப்பினர்களில் யாருக்கேனும் [38 ° C]-க்கும் அதிகமான வெப்பநிலை
உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட தகவல்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும். மேலும்
அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.
கோவிட் -19-இன் அறிகுறிகள்
ஏதேனும் இருப்பின் அந்த பணியாளர் சுயமாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
கோவிட் -19 நோய்த் தொற்று ஏற்பட்டால், உடனடியாக சுகாதார அமைச்சகத்திற்கு
அறிவிக்கப்பட வேண்டும். சந்தேகத்திற்கிடமானவர்களை பரிசோதித்தல், தடமறிதல்
மற்றும் தனிமைப்படுத்துதல் குறித்து சுகாதார அமைச்சகத்தின் வழிமுறைகளைப்
பின்பற்றவும்.
தொடர்பு மற்றும் செயல்படுத்தல்
விமானம் மற்றும் ஓய்வறைகளில் சானிடைஸர்கள் கொண்டு கிருமி நீக்கம்
செய்யும் சிறந்த நடைமுறைகளை விளக்கவும். (எ.கா. பயணிகள் இருக்கைகளை கிருமி
நீக்கம் செய்தல், மற்றும் பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் கழிப்பறைகளை
கிருமி நீக்கம் செய்தல்).
விமானத்தில் புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை தடை செய்தல்.
டிஜிட்டல்
சேனல்களைப் பயன்படுத்துதல் (சமூக ஊடகங்கள், தொலைபேசி பயன்பாடுகள் மற்றும்
குறுஞ்செய்திகள் போன்றவை) மற்றும் பிற சேனல்கள் போன்றவை)
விமானத்தின்
உள்ளேயும் நிலையங்களிலும் சுவரொட்டிகளை வைப்பது மற்றும், சுகாதார
அமைச்சகத்தின் உத்தரவுகளுக்கு ஏற்ப ஊழியர்கள், பயணிகள் மற்றும் குழு
உறுப்பினர்களிடையே கோவிட் -19 நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
திறமையான அதிகாரிகளால் வழங்கப்பட்ட அறிவுரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய மேலாளர்களை நியமித்தல்.
வழங்கப்படும் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் தங்கள் கைகளைத் தூய்மைப்படுத்துவதற்கான வழிமுறைகளை அறிவுறுத்துதல்.
அனைத்து ஊழியர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுக்கும் கோவிட் -19 நோய் குறித்து கட்டாய சுகாதார மற்றும் பாதுகாப்பு பயிற்சி அளித்தல்.
0 Comments