அரசாங்கத்தின் பல்வேறு முயற்சிகளை மேலும் சில காலத்திற்கு நீட்டிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொற்றுநோய் பரவல் ஆரம்பித்ததிலிருந்து, செயல்படுத்தப்பட்டிருக்கும் முன்முயற்சிகளின் (சவுதி தொழிலாளர்களுக்கு ஆதரவளித்தல், அபராதங்ளுக்கு தற்காலிக தடை, கட்டண வசூலிப்பு, விலக்குகள் மற்றும் சில அறிவிப்புகள் ஆகியவற்றுக்கான கால அவகாசத்தை ஒத்திவைத்தல்) முழு பலனைப் பெறுவதற்காக, அவற்றை நீட்டிப்பது தொடர்பாக கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த நடவடிக்கை தனிநபர்கள், முதலீட்டாளர் துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களை ஆதரிப்பதற்கும், ராஜ்ஜியத்தின் பொருளாதாரத்தை வளர்ப்பதில் தங்கள் பங்கை மேம்படுத்துவதற்கும், நிதி மற்றும் பொருளாதார தாக்கங்களை தணிப்பதற்கு பங்களிக்கும் அவசர அரசாங்க நடவடிக்கைகளின் விரிவாக்கமாகும்.
ஊதியங்கள், VAT மற்றும் இழப்பீடுகள் குறித்து மன்னர் சல்மானின் புதிய உத்தரவுகள்
நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள்:
- சனத் அமைப்பு மூலம் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தனியார் துறையில் பணிபுரியும் சவுதி தொழிலாளர்களை ஆதரித்தல்.
- ஆட்சேர்ப்பு தொடர்பான அபராதங்களை நிறுத்துதல்.
- தனியார் துறை தொடர்பான சில சேவைகளுக்கான தடைகளை நீக்குவது.
- அனைத்து நிறுவனங்களிலும் பணி புரியும் “சவுதிளை” கணக்கெடுத்தல்.
- தற்போதைய காலகட்டத்தில் ஊதிய பாதுகாப்பு இடைநீக்கத்தை நீக்குதல்.
- உயரடுக்கு வாடிக்கையாளர்களுக்கான சேவையை 24 மணி நேரமும் வழங்க அனுமதித்தல்.
- வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பிப்பதற்கு ஈடாக இறக்குமதிகள் மீதான சுங்க வரி வசூலை முப்பது நாட்களுக்கு ஒத்திவைத்தல்.
- முன்கூட்டியே பணம் செலுத்தாமல் வரி செலுத்துவோர் சமர்ப்பித்த தவணை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது.
- சுங்கவரி மூலம் VAT வரி செலுத்துவதை அறிவிப்பு மூலம் தள்ளிவைத்தல்.
- வாட் வரிகளை திரும்பப்பெறுதல் தொடர்பான கோரிக்கைகளை துரிதபடுத்துதல் மற்றும் அது தொடர்பான ஆய்வுகளை பின்னர் மேற்கொள்வது.
- காலாவதியாகும் நாளிலிருந்து (கூடுதல் மாதம்) அவகாசம். மற்றும், காலாவதியாகும் நிதி இழப்பீட்டில் இருந்து ஓரளவு விலக்கு, தேவை ஏற்பட்டால் கூடுதல் காலத்திற்கு (ஒரு மாதம்) இது நீட்டிக்கப்படும்.
- சேவையை நிறுத்துவதற்கான நடைமுறைகளை அமல்படுத்துவதை ஒத்திவைப்பதற்கும், ஜகாத் நிலுவைத் தொகையை செலுத்த தவறிய நிறுவனங்கள், வரி மற்றும் ஜகாத்தை வழக்கமான தேதியில் செலுத்த வேண்டிய கட்டாயத்தில்லாத வரி செலுத்துவோருக்கான நிதியை பெறுவதற்கும் இரண்டு கூடுதல் மாதங்களுக்கு அவகாசம் வழங்குதல்.
தொற்றுநோய்க்கு எதிராக இராஜ்ஜியம் போராடுகிறது
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து, இராஜ்ஜியத்தின் அரசாங்கம் தனிநபர்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு பலனளிக்கும் வகையில், 214 பில்லியன் ரியால்கள் மதிப்புள்ள 142 திட்டங்களை அவசர முயற்சிகளாக அறிவித்து செயல்படுத்தியுள்ளது.
பல மந்திரி குழுக்களை அமைப்பதோடு, இளவரசர் முஹம்மது பின் சல்மான் பின் அப்துல்அஸீஸ், மகுட இளவரசர், துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரின் தொடர்ச்சியான பின்தொடர்தலுடன், இந்த குழுக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள விளைவுகள் மற்றும் சிக்கல்களை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
0 Comments