Subscribe Us

header ads

(Emirates NBD) தனது பணியாளர்களில் 800 பேரை பணிநீக்கம் செய்யவதாக அறிவிப்பு


மத்திய கிழக்கின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றும், துபாயில் துவங்கப்பட்ட முதல் தேசிய வங்கியுமான எமிரேட்ஸ் என்பிடி (Emirates NBD) தனது பணியாளர்களில் 800 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் எதிர்கால தொழில் வளர்ச்சியை கணக்கில்கொண்டு இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய Emirates NBD வங்கியின் செய்தித் தொடர்பாளர், ” சமீபத்திய நடவடிக்கைகளால் பொருளாதாரம், நிதி மற்றும் கடன் வழங்கும் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக அத்துறைகளில் மாற்றங்களும் ஆட்குறைப்பும் அவசியமாகியுள்ளது” என்றார்.

“பொருளாதாரத்தின் போக்கு, சவாலான காலம் வர இருப்பதை உணர்த்துகிறது. அதற்குத் தகுந்தாற்போல், எதிர்கால தொழில் வளர்ச்சிக்குத் தேவையான எண்ணிக்கைக்கு அதிகமாக உள்ள எங்களது சக பணியாளர்களை பணியிலிருந்து விடுவிக்க இருக்கிறோம்” என செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

“தீர்க்கமாக யோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் எங்களுடைய பணியாளர்களை மிகுந்த கண்ணியத்துடன் நடத்துகிறோம். Emirates NBD வங்கிக்கு வெளியிலும் அவர்களுடைய வாழ்க்கை சிறக்க துணை நிற்போம். எங்களுடைய நம்பிக்கை இன்னும் மிச்சமிருக்கிறது. அமீரகத்தின் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில், வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில்  சரியான எண்ணிக்கையிலான தொழிலாளர்களுடன் Emirates NBD வங்கி இயங்க இருக்கிறது” என செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments