இந்நிலையில் கட்டண பார்க்கிங் திட்டம் ஜூலை 1 முதல் மீண்டும் ஷார்ஜாவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
இதுகுறித்து ஷார்ஜா நகராட்சியின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் துணை
இயக்குனர் ஜெனரல் காலித் பின் ஃபாலாஹ் அல் சுவைதி (Khalid bin Falah Al
Suwaidi) பேசுகையில்,” கொரோனா காரணமாக மக்களுக்கு பொருளாதார ரீதியில்
உதவும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஷார்ஜாவின்
குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்கள் ஷார்ஜாவில் உள்ள 40,000 பார்க்கிங்
இடங்களை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டிருந்தது”
என்றார்.
ஷார்ஜா நகராட்சியின் இந்த புதிய அறிவிப்பை செயல்படுத்தும் அதே வேளையில்,
பார்க்கிங் பகுதிகளில் இடைஞ்சலாக வாகனத்தை நிறுத்துதல் மற்றும்
ஒன்றுக்கும் மேற்பட்ட பார்க்கிங் இடத்தை பயன்படுத்துதல் போன்றவற்றைத்
தடுக்கும் விதத்தில் ஆய்வுக் குழுக்கள் தொடர் கண்காணிப்பில் இருக்கும்
எனவும், மக்களுக்கு சிறந்த பார்க்கிங் வசதிகளை நகராட்சி அளிக்கும் எனவும்
அல் சுவைதி தெரிவித்தார்.
“ஜூலை 1 முதல் ஷார்ஜா முழுவதிலும் உள்ள 40,000 பார்க்கிங் இடங்களுக்கும்
கட்டணம் வசூலிக்கப்படும். கொரோனா காரணமாக பொருளாதார மற்றும் சுற்றுலா
நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் அரசால் தளர்த்தப்பட்டு
வருவதால் இந்த கட்டண பார்க்கிங் திட்டமும் அவசியமாகிறது” என அல் சுவைதி
குறிப்பிட்டார்.
நஷ்டம் ஈடு செய்யப்படும்
ஷார்ஜா நகராட்சியின் பொது பார்க்கிங் துறையின் இயக்குனர் அலி அகமது அபு
காஸின் (Ali Ahmed Abu Ghazin) “நீண்ட காலத்திற்கான பார்க்கிங் கார்டு
வைத்திருக்கும் சந்தாதாரர்களுக்கு ஏற்படும் நஷ்டங்களை ஈடு செய்யவும்
நகராட்சி திட்டமிட்டுள்ளது” என்றார்.
ஜுலை 1 அன்று அல்லது அதற்குப் பின்னர் காலாவதியாகும் பார்க்கிங்
கார்டுகளைக் கொண்டவர்களுக்கு காலாவதியாகும் தேதியிலிருந்து மேலும் மூன்று
மாத காலத்திற்கு அந்த கார்டுகள் செல்லுபடியானதாக கருதப்படும். ஜூலை 1 ஆம்
தேதிக்கு முன்னர் பார்க்கிங் கார்டிற்கான சந்தா காலாவதியாகி இருந்தால்,
காலாவதியாகும் தேதியிலிருந்து ஜூலை 1 வரை அவர்கள் தங்களது வாகனங்களை
இலவசமாக பார்க்கிங் செய்துகொள்ளலாம்.
“இதுவரையில் 11,643 சந்தாதாரர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தினை
ஈடுசெய்திருக்கிறோம். மேலும், புதிய காலக்கெடு குறித்தும், சந்தாவினை
நீட்டிக்கக்கோரியும் சந்தாதாரர்களுக்கு குறுஞ்செய்தி
அனுப்பப்பட்டிருக்கிறது” என காஸின் தெரிவித்தார்.
0 Comments