“பயணத்திற்கு முன்பும், பயணத்திற்கு பிறகும் உங்களுடைய கார்களை சுத்திகரிப்பு செய்து உங்களது குடும்பங்களை கொரோனா நோய்த் தொற்றிலிருந்து காத்திடுங்கள்” என துபாய் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது துபாய் போக்குவரத்து ஆணையம்.
பயணத்திற்கு முன்பும், பயணத்திற்கு பிறகும் கார்களில் கட்டாயமாக சுத்திகரிப்பு செய்யவேண்டிய ஐந்து பகுதிகள் அந்த விழிப்புணர்வு வீடியோவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவை, கார் கதவின் உட்பக்க மற்றும் வெளிப்பக்க கைப்பிடிகள், சக்கரங்கள், கியர் ஸ்டிக் (gear stick), எலெக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் சீட் பெல்ட் ஆகியவையாகும். பொதுவாக, எளிதில் தொடக்கூடிய அனைத்து இடங்களையும் சுத்திகரிப்பு செய்வது சிறந்தது.
அங்கீகரிக்கப்பட்ட கிருமிநாசினியை சுத்திகரிப்பிறகுப் பயன்படுத்தவேண்டும்.
எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வேக்கம் கிளீனர்களைக் (vacuum cleaner) கொண்டு பயணத்திற்கு முன்னரும், பின்பும் காரின் உட்பகுதியை சுத்தம் செய்துகொள்ளவேண்டும்.
0 Comments