பிரதான வீதிகளில் நடமாடும் மிருகங்கள் (மாடு , கழுதை , ஆடு) போன்றவைகள் வீதிகளில் மேய்ச்சலுக்காக வருகின்ற சந்தர்ப்பத்தில் வாகனங்களின் குறுக்கே செல்கின்ற போது இடம்பெறுகின்ற விபத்துக்கள் கல்பிட்டி பிரதான வீதியில் சில நாட்களுக்கு முன் அதிகம் பதிவாகி இருக்கின்றன.
மிருகங்களின் உரிமையாளர்களுக்கு கல்பிட்டி பிரதேச சபை மூலம் ஏற்கனவே அறியப்படுத்தியும் சிலர் இவ்வறிவித்தலை இன்னும் நடைமுறைக்கு எடுத்துக்கொள்ள வில்லை.
எமது இளைஞ்சர்களும் , பொது மக்களும் வீதியில் செல்லும் போது சற்று அவதானமாக செல்லும்படி கேட்டுக்கொள்கிறோம் விபத்துக்கள் , மரணங்கள் இடம்பெறும் இவ்வாறான பிரச்சினைகளை பொதுமக்கள் ஆகிய அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ் விழிப்புணர்வை அதிகம் பகிர்ந்து எமது உறவுகளின் விபத்துக்களை குறைக்க நீங்களும் பங்கு கொள்ளுங்கள் மற்றும் வீதி ஒழுங்குகளை கடைபிடித்து வாகனங்களை செலுத்துங்கள்
M.A.M Asfak
0 Comments