Subscribe Us

header ads

கல்பிட்டி வரலாற்று சுவடுகள் - 9 (தொடர்கள் : 1-8 வரை இணைக்கப்பட்டுள்ளது)

http://www.kalpitiyavoice.com/2020/06/6.html   (part 6)

 http://www.kalpitiyavoice.com/2020/06/7-123456.html (part 7)

http://www.kalpitiyavoice.com/2020/06/8-1234567.html (Part 8)

நாவல் காடு கிராமத்துக்கு வரும் கண்டி மன்னரும் பாிவாரங்களும் நீர் வெட்டு நடத்தியதாக நம்பப்படும் கைவிடப்பட்ட குளம் ஒன்றை ப் பார்த்தோம். பின்னர்அக்காலத்ததில் மன்னரால் அதிகாரபூர்வமாக நியமனம் பெற்றிருந்த தமிழர் ஒருவரின் குடும்பத்தினர் சிலரை ச் சந்தித்தோம். நீண்ட உரையாடலின் பின் மன்னரால் வழங்க ப்பட்ட வெள்ளி வாள் ஒன்றை யும் கண்டி இராச்சியத்துக்குரிய பிராந்தியக்கொடியை யும் ( இரண்டு கொடிகள்) பார்த்தோம்.


நாவக்காட்டின் தண்ணீர் புத்தளம் மாவட்டத்திலேயே சிறந்த தண்ணீர் என்று கூறுவதைக் கேட்டிருக்கிறேன். காசி செட்டி யும் இம்மாவட்டத்தில் சிறந்த தண்ணீர் கிடைக்கும் இடம் நாவக்காடு என்று குறிப்பிட்டுள்ளார். கல்பிட்டி முகத்துவாரம் தொடங்கி பள்ளிவாசல் துறை ,திகழி , ஆலங்குடா, நாவக்காடு உள்ளிட்ட பிரதேசம் முழுக்க நீர் வளத்துக்கு முக்கியமான பிரதேசம் தான்.

தென்னை, வாழையும், அனைத்து வகையான மரக்கறிகளும் விளையும் பூமி இது .விவசாயிகளும்,மீனவர்களும் தான் இப்பிரதேசத்தின் முதுகெலும்பு எனலாம் . 4,5 மைல் இடைவெளியில் 30 , 40 மைல் தொலைவிற்கு நீண்டு கிடக்கும் இந்து சமுத்திரக்கரையையும் அதே நீளத்திற்கு குறைவில்லாத கல்பென்டைன் குடாவையும் கொண்ட இப்பிரதேசத்தின் கடல்வளத்தை எப்படி வர்ணிப்பது. உள்ளூர் தேவை யையும் பூர்த்தி செய்து தேசத்தின் தேவைக்கும் சர்வதேச த் துக்கான


கடல்உணவுத்தேவைக்கும் பெரிய பங்களிப்புச்செய்யும் கடல் வளம் இது. கடல் தொழில் இங்கு பிரதான தொழில் , பலரது வாழ்வாதாரம். அரிசி , மாவு நீங்கலாக மீனும் மற்றும் கடல் உணவு களும்தான் இங்கு வாழும் மக்களின் பிரதான உணவு. பல கிராமங்கள் மீனவக்கிராமங்கள்தான்.முஸ்லிம் கிராமங்கள் கிறிஸ்தவ கிராமங்கள் தமிழ் கிராமங்கள் என இவை பரந்து கிடக்கின்றன.

விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கு ம் இடையில் நெருங்கிய தொடர்பு கள் இருந்தன. கிராமங்களுக்கு இடையே நல்லுறவுக்கு ப் பஞ்சம் இருக்கவில்லை.


அக்காலத்தில் கண்டி மன்னர்களுக்குத் தேவை யான கருவாடு பெற்று க் கொள்ள ப்பட்ட முக்கிய மான இடங்களில் இதுவும் ஒன்று. இலங்கைக்கடலில் தனக்கும் உரிமை உண்டு என்று சிங்கள மன்னர்கள் கூறுவதற்கு இருந்து ஒரிரு கடல் பிராந்தியங்களிலும் கல்பென்டைன் ஒன்று.


இந்த உரிமை யின் ஒரு பகுதி யாகத் தான் கண்டி மன்னன் வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் ( 1707- 1739 ) கண்டி யில் இருந்து கல்பிட்டி நோக்கித் தனது பரிவாரங்களுடன் பிரயாணம் செய்கிறான். முடிசூட்டல் விழாவின் பின்னர் நாவக்காடு சென்று அங்கு கடலில் குளித்து சில சடங்கு களின் பின்னர் நீர் வெட்டில் பங்கேற்கிறான்.

ராமநாத செட்டியார் புத்தளம் திசாவையாக ( பிரதேச ஆளுனர்) இருந்த போது 1720 அளவில் இது நடந்திருக்கிறது. நாவக்காட்டில் அப்போது 200 முக்குலத்தோர் குடிமக்கள் வாழ்ந்த னர் . அவர்கள் முக்குவ குலத்ததலைவர்களின் வாரிசுகள் என்றும் நாவக்காட்டில் ரோமன் கத்தோலிக்க ர் வழிபடும் சிறிய கத்தோலிக்கத்தேவாலயம் ஒன்று இருந்ததாகவும் சைமன் காசிச் செட்டி கூறுகிறார்.

அப்போது இங்கு தென்னை மரங்களும் பாக்கு மரங்களும் ஆங்காங்கே சில வயல் காணி களும் இருந்து ள்ளன. நாவக்காட்டின் பெயர் என்ன? அது பற்றி ய தகவல்கள் உள்ளனவா?


நவக்கடுவ : நாவக்காட்டின் பெயர் மூலம் இது என்பது காசி ச் செட்டி யின் வாக்கு மூலம். இது சிங்களச் சொல். புதிய வாள் என்பது இதன் பொருள் . புதிய வாள் களை மன்னர்கள் அங்கு வழங்கி வந்ததா ல் இப்பெயர் வந்திருக்கலாம்.(ஆனால் முன்னர் குறிப்பிட்டது போல நாவல் பழமரங்களுடன்தான் அதன் பெயரை நாங்கள் தொடர்பு படுத்துகிறோம். பூலாச்சேனை, நுரைச்சோலை , ஆலங்குடா, பனையடி போன்ற தாவரங்களின் பெயரைக் கொண்ட பல கிராமங்கள் இக்கிராமத்திற்கு அருகில் தான் உள்ளன. தில்லை யடி, இலந்தை யடி , கண்டல் குடா போன்ற பெயர் களையும் குறிப்பிடலாம் ).


கண்டி மன்னன் நரேந்திர சிங்கனின் நாவக்காட்டிற்கான பயணம் புத்தளம் நகரின் ஊடாகவே நிகழ்கிறது. (தொடரும்). msm anes

Post a Comment

0 Comments