Subscribe Us

header ads

ஹிட்லர் இறக்கவில்லை...!


அண்மையில் Brazilian பெண் எழுத்தாளர் தனது புத்தகத்தில் "ஹிட்லர் இறக்கவில்லை. அவர் ஆஸ்திரியா வழியே பிரேசில் நாட்டிற்கு தப்பி வந்து ஒரு கருப்பின பெண் ஒருவருடன் காதல் வயப்பட்டு 95 வயது வரை பிரேசில் நாட்டில் உயிர்வாழ்ந்து இயற்கை மரணம் எய்தினார்.மேலும் அவர் வாழந்த பிரதேச மக்கள் அவரை "German Uncle" என அழைத்தனர்.மேலும் Adolf Hitler என்ற தனது பெயரை Adolf ........ மாற்றி ரகசியமாக வாழ்ந்து வந்துள்ளார்.அப்போது அவர் பெயரின் மறுபகுதியாக தனக்கு பிடித்த இசையமைப்பாளர் ஒருவரின் பெயரை வைத்து கொண்டார்." என அந்த எழுத்தாளர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இதுவே அவரின் கருத்தாக அமைந்தது.ஆனால்,என்னை பொறுத்தவரை அவரின் கூற்று சற்று மாற்றி சிந்திக்க வைத்துள்ளது.உண்மையில் அவரின் கருத்தின் படி முதல் சந்தேகம் எழுவது மாற்றியமைத்து கொண்ட பெயர், உலகப்போர் முடிவை நோக்கி பயணிக்கும் தருணத்தில் யுத்தப் பலுவின் காரணமாக ஹிட்லர் தனது முழு கவனத்தையும் ரஷ்ய போரின் பக்கம் திருப்பும் போது யூதர்களின் ராணுவ முகாமை பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்ட Hitlerயின் நெருங்கிய அதிகாரிகளில் ஒருவரின் பெயர் தான் Adolf ..... என்பதாகும்.இவர் தான் யூதர்களை சுட்டு கொள்வது சிரமாக உள்ளது என்பதை அறிந்து மிகவும் கொடுரமான பயங்கரமான யூதர்களுக்கு சித்திரவதை முகாமை உருவாக்கி விஷ வாயு மூலம் ஒட்டுமொத்த யூதர்களையும் அழித்து ஒழித்தவர்.இன்றும் அந்த முகாமிற்கு சென்று வெளியே வருபவர்கள் கண்ணீருடன் வருவர் என அடைமொழி கொண்டு அடையாளபடுத்தப்படும் அந்த முகாமில் கொத்து கொத்தாக யூதர்களை கொல்ல தன்னிச்சையாக முடிவெடுத்த இரண்டு அதிகாரிகளில் ஒருவர்.

ஹிட்லர் தற்கொலை செய்த பின் ஜேர்மனி தலைவணங்கிய பின் இந்த Adolf ...... தலைமறைவாக நாட்டை விட்டு ஓடி ஆஸ்திரியாவில் தஞ்சம் புகுந்து ரகசியமாக வாழந்து வந்தவரை சிறை பிடித்து போர் குற்றவாளி என நிரூபணமாகி அவரின் 69 வயதில் தூக்கிலிடப்பட்டார்.

இதனடிப்படையில் இங்கு உள்ள மிகப்பெரிய சர்ச்சை பிரேசில் நாட்டில் தனது பெயரை மாற்றி வாழ்ந்ததாக கூறப்படும் Hitlerயின் மாற்றப்பட்ட பெயரும் Hitlerயின் தூக்கிலிடப்பட்ட அதிகாரியின் பெயரும் ஒன்றாக இருப்பது.ஹிட்லர் மற்றும் ஈவா என்போரின் உடல் அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்டு இருந்தது என்ற அடிப்படையில் ஹிட்லர் தப்பி ஓடி இருக்கலாம் என்ற அந்த எழுத்தாளர் கூற்று தப்பியோடிய வாழ்க்கை முறை என்பன தூக்கிலிடப்பட்ட அதிகாரிக்கு பொருத்தமான முறையில் உள்ளது.

ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை என்றால் அன்று Eva உடன் இறந்து கிடந்தது ஒருவேளை தூக்கிலிடப்பட்ட அதிகாரியாக இருக்கலாம்.அப்படி அவர் இறக்க காரணம் ஹிட்லர் நேச நாட்டை திசை திருப்பி தான் தப்பியோட செய்த முயற்சியாக இருக்கலாம்.அப்படியெனின், ஒன்று அதிகாரி மற்றும் ஈவா தமது விசுவாசத்தை காட்ட சுயமாக வந்து இருக்கலாம்.அதற்கு காரணமாக ஈவாவிற்கு காதல் அதிகாரிக்கு பக்தி எனலாம்.காரணம் அவ்வளவு பெரிய முகாமிற்கு தலைமைத்துவ பொறுப்பை சாதாரண ஒருவருக்கு ஹிட்லர் கொடுக்க வாய்ப்பில்லை.நிச்சயமாக நம்பிக்கை வாய்ந்த உண்மையான நபரை தான் ஹிட்லர் தேர்ந்தெடுப்பார்.அந்தளவு நம்பிக்கையான இருவரும் ஹிட்லரை காக்க இப்படி செய்திருக்கலாம்.அப்படி தப்பி சென்ற ஹிட்லர் தன் நன்றிக்கடனாக அதிகாரியின் பெயரில் வாழந்திருக்கலாம்.அப்படி இல்லையெனின், தான் தப்பிக்கும் வகையில் இருவரையும் தான் கொலை செய்துவிட்டு தப்பி சென்றிருக்கலாம்.அப்படி வாழும்போது குற்ற உணர்வு காரணமாக அதிகாரியின் பெயரில் வாழ்ந்திருக்கலாம்.

அப்படி இல்லை, இறந்தது ஹிட்லர் என்றால் எழுத்தாளர் கூறிய பிரேசில் நாட்டில் 95 வயது வரை வாழ்ந்தது அதிகாரியாக இருக்க வேண்டும்.அப்படி அதிகாரி என்றால் அவர் எப்படி தன் சொந்த பெயரில் வாழ முடியும்..? அப்படி எனில்,ஆஸ்திரியாவில் தூக்கிலிடப்பட்டவர் யார்..? இது போன்ற பல கேள்விகள் முன்னுக்கு பின் முரணாக எழுகிறது.

இவை தவிர்ந்த எனது கருத்து ஒன்றேல் ஹிட்லர் இறந்து அதிகாரி மற்றும் சிலர் ஆஸ்திரியா வழியே தப்பி சிதறி வாழ்ந்திருக்க வேண்டும்.இவர்களின் வழி ஒன்றிணைந்த பாதை என்பதால் எழுத்தாளர் குழம்பி இருக்கலாம்.வெவ்வேறு நபர்களை ஒருவர் என நினைத்திருக்கலாம் அல்லது சித்தரித்து இருக்கலாம்.ஆனால்,அப்படி இருக்கும் போது அதிகாரி மற்றும் பிரேசில் நாட்டில் வாழந்த மனிதரின் பெயர் ஒன்றாக இருக்க முடியும்? ஆனால் அவர் ஆதாரமாக கூறிய புகைப்படத்தில் உள்ள நபரின் முக சாயல் ஹிட்லரை விட அதிகாரியின் முகத்திற்கு ஒத்துப்போகிறது.ஆனால் அப்படி ஒத்து போகும் நபரின் புகைப்படத்தில் உள்ள மனிதர் அதிகார பூர்வமாக தூக்கிலிடப்பட்டார்.

இவ்வளவு குழப்பமும் சிக்கலும் நிறைந்த ஒருவரின் வாழ்வை எப்படி நிச்சயித்து அடிக்கோடு இட்டு காட்ட முடியும்.இவ்வளவு ஆய்வின் முடிவில் மனதில் எழும் கேள்வி, ஹிட்லர் இறந்தாரா தப்பித்தாரா? 95 வயது வரை வாழந்த "Germany Uncle" யார்? அந்த "Germany Uncle" என்பவரின் பெயரும் அதிகாரியின் பெரும் ஒன்றாக இருப்பது எப்படி? இவற்றை தாண்டி இவ்வளவு ஆய்வுகளை செய்த பல ஆய்வாளர்கள்,எழுத்தாளர்கள் இந்த சின்ன விடயத்தை விட்டது எப்படி? ஹிட்லர் தன் பெயருடன் இணைத்துக் கொண்ட இசையமைப்பாளர் யார்? இப்படி முடிவிலியாக தொடரும் கேள்விளுக்கு ஒரே பதிலாக அமைவது "ஹிட்லர் என்பவர் யார்? அவரின் பின்புலத்தில் உள்ள உண்மை என்ன?" என்ற கேள்விகளுக்கு கிடைக்கும் பதிலே! உலகை அலர வைத்த ஒரு சர்வதிகாரியின் வாழ்வு ஏன் இப்படி விடைகள் அற்ற கேள்விகளாக மிஞ்சி கிடக்கிறது? ஒருவரை பற்றி அறியாமல் எப்படி தீர்மானிப்பது? இன்றுவரை நாம் படித்த தீர்மானத்தின் பின்புலம் என்ன ?

இந்த முழு கட்டுரையையும் வாசித்தவர் எனின் அந்த பெயரின் பாதியை கண்டுபிடித்து commentயில் பதிவிடுங்கள்.மீண்டும் ஒருமுறை வரலாற்றை கற்க வாய்ப்பாக அமையும்.விடைகளுக்கு பதிலாக பல கேள்விகள் கிடைக்கும்.......

Post a Comment

0 Comments