சவூதி அரேபியாவின் 34.8 மில்லியன் மக்கள்தொகையில் 10.5 மில்லியன்
வெளிநாட்டினர் வசிக்கின்றனர். இந்நிலையில் சவூதியில் வசிக்கும்
வெளிநாட்டினர்கள் அனைவரும் தங்கள் அடையாள அட்டைகளின் செல்லுபடி காலத்தை
உறுதி செய்யுமாறு சவூதி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர், இவற்றை
மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
“முக்கீம் ஐடி” என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் வெளிநாட்டினரின்
ரெசிடென்சி அனுமதியை முதல் முறையாக புதுப்பிக்க தவறும் பட்சத்தில்
அவர்களுக்கு 500 சவூதி ரியால் அபராதமாக விதிக்கப்படும் என்றும், இரண்டாவது
முறையாக புதுப்பிக்க தவறினால் 1,000 சவூதி ரியால் அபராதமாக விதிக்கப்படும்
என்றும் பாஸ்போர்ட் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மூன்றாவது முறையாக இவ்விதி மீறலில் ஈடுபடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது முக்கீம் ஐடியின் செல்லுபடி காலத்தை சரிபார்க்க
விரும்புபவர்கள் உள்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட ஆன்லைன் தளமான
அப்சர் மற்றும் முக்கீம் (Absher and Muqeem) ஆகியவற்றின் மூலம் சரிபார்க்க
முடியும் என்று பாஸ்போர்ட் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்த சவூதி மேற்கொண்ட
அயராத முயற்சிகளுக்கு மத்தியில், சவூதிக்குள் உள்ளே அல்லது வெளியே
இருக்கும் வெளிநாட்டினரின் அடையாள அட்டைகளை மூன்று மாதங்களுக்கு இலவசமாக
நீட்டிப்பதாக இயக்குநரகம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
0 Comments