Subscribe Us

header ads

எச்சரிக்கை ஸ்பெசல் ரிப்போர்ட் : வெற்றுக்கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம்

(எம்.மனோசித்ரா)


2020 இன் முதலாவது சூரிய கிரகணம் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. 

இது நெருப்பு வளைய சூரிய கிரகணமாக பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சூரிய கிரகணத்தை இலங்கையிலும் அவதானிக்க முடியும் என்பதோடு யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பிரதேசத்தில் 24 வீதமும் , கொழும்பு பிரதேசத்தில் 16 வீதமும் தென்படும்.

இது தொடர்பில் இலங்கை கோள் மண்டலத்தின் பணிப்பாளர் கே.அருணு பிரபா பெரேரா மேலும் தெரிவித்திருப்பதாவது :

இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 10.24 மணிக்கு இலங்கையில் ஆரம்பமாவதோடு இதனை யாழ்ப்பாணத்தில் முற்பகல் 11.54 மணிக்கும் கொழும்பில் முற்பகல் 11.51 மணிக்கும் அவதானிக்க முடியும்.

இதனை அவதானிப்பதற்குப் பொறுத்தமான இலக்கம் 14 என்ற விசேட கண்ணாடி , சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான விசேட கண்ணாடி என்பவை மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும்.

ஏனைய கண்ணாடி பொருட்கள் , எக்ஸ்ரே அட்டைகள் என்பவற்றைப் பயன்படுத்தி இதனைப் பார்வையிட வேண்டாம் என்று பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக வெற்றுக் கண்களால் இதனை அவதானிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments