படையினர் 3000 பேரை கொலை செய்த கருணா அம்மானைக் கைது செய்யுமாறு சிங்கள ராவய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இன்று பகல் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மகல்கந்த சுதத்த தேரர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு பகுதியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் ஒன்றில் கருணா உரை நிகழ்த்தியபோது, போர்க்காலத்தில் ஆனையிறவு பகுதியில் தாம் 3000 இராணுவ சிப்பாய்களை கொன்றதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments