Subscribe Us

header ads

கல்பிட்டி வரலாற்று சுவடுகள் - 4



கல்பிட்டி நினைவுகள் - 4





புத்தளம் இறங்கு துறையைக் கடலோி விழுங்கி விட்டது. முஸ்லிம்களின் வரலாற்று க்கும் ஒரு சிறப்பு அடையாளமானஅதில் நாம் கவனம் செலுத்த வில்லை. ஹிஷாம் கூறுவது சரி . ரேகடிப்பாலம் என்று புத்தளம் மக்கள் அதை அழைத்து வந்து ள்ளனர்.


போதிய வரலாற்றுச் சான்றுகள் இன்றி அல்லல்படும் நிலை யில் இவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை எவ்வித த் திலும் குறைத்து மதிப்பிட முடியாது. கல்பிட்டி ரேகுப்பாலம் தப்பித்து ள்ளது. ஆனால்,அது வேறு ஒரு பொறிக்குள் சிக்கி உள்ளது.

புத்தளம் கடல் நீர் ஏரி யில் இருந்து கல்பிட்டி முகத்துவாரம் வரை( Up to Dutch Bay ) பல இடங்களில் அதாவது கடலோரக் கிராமங்களில் பல சிறிய துறைகள் இருந்தன.

ஏத்தாலை, கண்டல் குடா, பள்ளிவாசல் துறை, குறிஞ்சாம்பிட்டி துறை கள் முக்கியமான வை ( குறிஞ்சிப்பிட்டியில் இருந்து 4 மைல் தொலைவில் கல்பிட்டித்துறைமுகம் இருந்தது ). இங்கிருந்த வற்றில் பெரிய து ஏத்தாலைத்துறைதான். 2000 யார் நீளமான இறங்கு துறைப் பாலம் சிதைந்து கிடப்பதை இன்று ம் காணலாம் . பண்ட ஏற்றுமதி இறக்குமதி க்காக கடலை யும் தரையையும் இணைத்து நிற்கும் நீண்ட அழகான பாலம்.

பெரிய வரலாற்று டன் அழியும் நிலையில் இன்று அது காட்சி தருகிறது

ஏத்தாலை ஒரு இறங்கு துறையாக செயல் பட்ட கிராமம். அது திகழியின் துறைமுகம். திகழி மரைக்காயர் களின் குகை. பெரிய வணிகர்கள் இங்கு வாழ்ந்தனர். ஏத்தாலைத் துறை முகம் ஊடாக இந்த மரைக்காயர் கள் தமிழ் நாட்டுடன் நேரடி வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். பெரிய மனைகளும் தோட்ட ந்துரவுகளும் அவர்களுக்கு இருந்தன. திகழி ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பட்டினம்.

வள்ளல் சீதக்காதி மரைக்காயரின் குடும்ப உறவினரான ஆசாரக்கோவையின் ஆசிரியர் புலவர் அப்துல் மஜீத் வாழ்ந்து மரணித்த இடம் .

அப்துல் மஜீத் வணிகத்திற்காக க் கல்பிட்டி க்கு வந்து பின்னர் திகழியில் குடியேறி உள்ளார்.

வள்ளல் ஹபீப் அரசரின் செல்வாக்கால் திகழி செழிப்படைந்ததாக ஒரு வரலாறு உண்டு. ஹபீப் அரசர் , சீதக்காதி யின் பினனர் 17 ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பெயர் பெற்று விளங்கிய பெருவணிகா். ஹபீப் அரசர் பற்றிய நூலில் மானா மக்கீன்ஏத்தாலைத் துறைமுகம் பற்றி 2004 இல் படங்களுடன் சில வரலாற்று குறிப்புகளைத் தந்திருந்தார்.

2009இல் அந்தப் பகுதி க்குச் சென்று படத்துடன் சில விபரங்களை நான் எழுதி இருக்கிறேன். 1960 களில் ஏத்தாலையைக் கடந்து செல்கையில் 60, 70 டொன்கள் ஏற்றக் கூடிய பெரிய மரக்கலம் ஒன்று( அல்ல து இரண்டு) ஒதுக்கப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்டிருந்ததைக் கொண்டுள்ளேன். இது குறித்து ஊர் விபரங்களை நன்கு அறிந்த எனது பாடசாலை த் தோழர் மறைந்த கவுஸ் தீன் அவர்களிடம் கேட்டேன் . உண்மைதான் கைவிடப்பட்ட நிலையில் சில பெரிய மரக் கலஙகள் துறையில் கிடந்தன. அவற்றிற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றார்.

பள்ளிவாசல் துறை என்ற பெயரிலேயே துறை (முகம்) அடங்கிக் கிடக்கிறது. பள்ளிவாசல் துறையில் செய்யது ஹாஜா செய்கு அலாவுதீன் ஒலி யுல்லா தர்கா ( Shrine )வில் இருந்து மேற்குத் திசை யில் சுமார் ஒரு மைல் தொலைவில் பள்ளிவாசல் முந்தல் உள்ளது. முந்தல் என்பது துறை அல்லது முனை என்பதை க் குறிக்கும். பொருள் ஏற்றுமதி இறக்குமதி க்கு ம் போக்கு வரத்துக்கும் மக்கள் இதைப் பயன் படுத்தி வந்து ள்ளனர். தர்காவுக்கு கிழக்கில் அரை மைல் தொலைவில் தொழுகை க்கான பள்ளிவாசல் இருந்தது. தர்காவை ,பெரிய பள்ளிவாசல் என்று அழைக்கப்பட்டதும் உண்டு . பள்ளிவாசல் துறை யின் பெயர்வரலாறு இவ்வாறு தான் நிகழ்ந்திருக்க வேண்டும்.

பின்னர் தர்காவிற்கு அருகில் இருந்த மக்கள் படிப்படியாக மேட்டு நிலம் நோக்கி நகர்ந்து ள்ளனர். பள்ளிவாசல் துறை மக்கள் 2மைல் தூரத்தில் தமது குடியிருப்புகளை அமைத்து புதிய பள்ளிவாசலையும் கட்டிக்கொண்டனர். பூா்வீகப்பள்ளிவாசலும் அதற்கு அருகில் இருந்த மைய வாடியும் கைவிடப்பட்டன.

புதிய பள்ளிவாசலின் இன்றைய வயது 200 ஐ யும் கடந்தது. அந்த ப் பள்ளிவாசல் தான் நான் பார்த்த, தொழுத, ஹதீஸ் கேட்ட பழைய அமைப்பு டைய 800 பேர் களை உள்ள டக் கக் கூடியபள்ளிவாசல். ஜவாத் மரைக்காா் அந்தப் பள்ளியை அறிவார். அந்தப் பள்ளியும் இன்று இல்லை.

1980 களில் கட்டப்பட்ட புதிய பள்ளிவாசல் ஊரை அலங்கரிக்கிறது.

ஆனால் சரித்திரங்கள் புதைக்க ப்பட்டுவிட்டன. தடாலடி யாக மக்கள் தாம் நினைத்ததை எல்லாம் செய்து விடுவார்கள்.

நான் எப்போதும் கூறுவது போல் பல நூறு ஆண்டுகளாக வரலாற்றை ச் சுமக்கும் இலங்கை தர்காக்களில் ஒன்றாக 600 வருடப் பழமையான வரலாற்றை ச் சுமந்த வாறு அந்த தர்கா இன்று ம் புதிய பொலிவுடன் திகழ்கிறது. அதன் ஆரம்பம் தரையில் அடையாளம் இட்ட கபுறடிதான்.கட்டிடமாக அமைந்தது பிற்காலத்தில். அதுவும் 300 வருடங்களுக்கு முன்னரே அந்த மாற்றமும் நிகழத்தொடங்கி விட்டது. பெரிய நிலமும் சில சிறு தென்னஙகாணிகளும் மரைக்காயர் மாா்களின் நல்ல பராமரிப்பும் அதன் வளர்ச்சிக்கு உதவின.

12 தலை முறை மரைக்காயர் கள் ஆட்சி யில் இந்த ஊர் இருந்து ள்ளது . பிச்சை மரைக்காயாில் இருந்து அந்தப் பட்டியல் ஆரம்பி க் கிறது.கல்பிட்டி செய்கு அலாவுதீன்மரைக்காயர், புத்தளம் மஹ்ரூப் மரைக்காயர் என்பவர் களுடன்1970களில் மரைக்காயர் நிர்வாகமும் சந்ததியினா் உரிமைகளும் இடை நிறுத்தப்படுகிறது. மரைக்காயர் நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுவடைந்து இருந்தன.

கல்பிட்டி , முதலைப்பாளி, திகழி, புத்தளம் பகுதிகளில் வாழ்ந்த மரைக்காயர் பரம்பரை களுடன் பள்ளிவாசல் துறை மரைக்காயர் களுக்குத் தொடர்புகளும் இரத்த உறவுகளும் இருந்தன.

இவர் கள் சிறு நிலச்சுவாந்தா்கள், வர்த்தகர்கள். ஊர் த்தலைமைத்துவம் இவர் களின் கைகளில் தான் இருந்தன . இவர்கள் தமிழ் நாட்டை ச் சேர்ந்த வர் கள். புத்தளம் முதல் கல்பிட்டி வரை செழிப்பாக இருந்த கடல் வணிக த்தினால் கவரப் பட்டு சிறு முதலீடு களுடன் இந்த ப் பிரதேச த்து க்கு ள் பிரவேசித்தவா்கள் . தஞ்சாவூர், கீழக்கரை, காயல்பட்டினம், இராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இருந்து இவர்கள் இங்கு வந்துள்ளனா்.

செல்வந்தர்கள் மட்டுமல்ல பல தரத்தவரகளும் வந்து இங்கு குடியேறி இருக்கிறார்கள்.எப்போது என்று காலத்தினை மட்டிடுவது கடினமான து. ஏறக்குறைய 12ம் நூற்றாண்டில் ஆரம்பமாகி இருக்கலாம். மீன் பிடி யும் முத்து க்கு ளிப்பும் கூட இவர்களை இங்கு கொண்டு வந்து ள்ளன. நாங்கள் யார் என்பது இவர்களின் நிழல்களில் இருந்து கிடைக்கும் நிஜங்கள்தான்.( தொடரும்).
-Professor Anes-

Post a Comment

0 Comments