ரேகடிப்பாலத்தைப் புத்தளம் இழந்து விட்டது.ஆனால் புத்தளம் முஸ்லிம்களின் வரலாற்றை ப் பொறுத்தவரை அது ஒரு தொன்மை வரலாற்று ச் சுவடுகளில் ஒன்று. அழிந்து விட்டது என்று விட்டு விட முடியாது. கடல் தொல்லியல் ஆய்வுக்குழு வின் உதவியை பெற்று நீருக்குள் மூழ்கி வரலாற்றுசசான்றுகளைப் பெற முயற்சிக்கலாம். ரேகடிப்பாலக் காட்சி யை ச் சித்திரிக்கும் பெரிய ஓவியம் மற்றும் மாதிரிவடிவம் ஒன்றை ஜிப்ஸம் அல்லது உலோகம் மூலம் வடிவமைத்து ப் பாதுகாக்கலாம். பொருத்தமான இடத்தில் வரலாற்று குறிப்புகளுடன் ஒரு படி கத்தைத்திறந்து வைக்க லாம்.
கண்டி மன்னர்களோடு மட்டுமல்ல குருணாகல்இராச்சிய காலத்திலும் அதற்கு முன்னதாக வும் இந்த நாட்டின் ஏற்றுமதி இறக்குமதியில் பங்கேற்ற துறைமுகம் அது இந்த த் துறைமுகத்திற்குப் பொருள்கள் ( தவளம் மாடு கள் மூலம் ) கொண்டு வரப்பட்டு கல்பென்டைன் கடல் ஏரி ஊடாக சிறிய படகுகளில் கல்பிட்டித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு தென்னகத்திற்கும் வேறு நாடு களுக்கு ம் கப்பல்களில் கொண்டு செல்ல ப்பட்டன. வெளிநாட்டு பொருள்கள் சிங்கள ராட்சியங்களுக்கு கொண்டு செல்ல ப்பட்டது ம் இதே துறைமுகங்களின் ஊடாக த்தான்.
புத்தளம் நகரினதும் கல்பிட்டியினதும் பண்டைய குடியேற்ற வரலாற்றின் பிரதான பாத்திரத்தை ஏற்றிருந்ததும் இவ்விரு துறைமுகங்களும்தான். புத்தளம் வரலாற்று விபரங்களை நன்கு அவதானித்தால் இழக்க ப்பட்ட முகையதீன் ஆண்டகை தா்கா வுக்கும் பெரிய வரலாற்று முக்கியத்துவம் இருப்பதை அறிய முடியும்.
புத்தளம் பெரிய பள்ளிவாசல் மீது அளவிறந்த பற்றுதல் புத்தளம் மக்களுக்கு உண்டு.
அந்தப் பள்ளிவாசலின் பின்னணியில் இன்னும் ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாற்று சுவடுகளும் அந்தப் பள்ளியின் நிலத்திற்கு ள் தான் புதைந்தது ள்ளன அல்லது புதைக்க ப்பட்டு ள்ளன.
புதைந்தது போன புத்தளம் வரலாறு என்று ம் அதற்கு ப் பெயரிடலாம். இன்று ள்ள புத்தளம் பெரிய பள்ளிவாசல் 1935 இல் கட்டப்பட்ட கட்டிடம். அரிதான கட்டிடக்கலை கலை அம்சங்களை கொண்ட அழகிய பள்ளிவாசல்.
அங்கிருந்த தர்கா ஒன்று இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட இடத்தில் தான் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.அன்று புத்தளம் நகரில் முஸ்லிம்களுக்கு இடையில் நடைபெற்ற கருத்து மோதல்கள் இறுதியில் வன்முறை வடிவம் பெற்றது. சமரசங்கள் தோல்வியுற்ற ன. தர்கா அழிக்கப்பட்ட து. 500 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்று ச் சின்னம் ஒன்று இல்லாமல் செய்யப்பட்ட து. கலாச்சார, வரலாற்று, தொன்மை களைப் பேசும் கட்டிடங்களை யும் வைத்திய சாலைகளையும் கல்விக்கூடங்களயும் நூல் நிலையங்களை யும் அவை யாளருக்கு சொந்தமானவையாக இருந்தாலும் அவற்றை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை.
மனித உரிமைகள், மனித ப் பெறுமானஙகள், நாகரிக சின்னங்கள் வரலாற்று ச் சான்றுகள் விடயத்தில் இப்படி ஒரு முடிவு பற்றி நாம் அறிவூட்டப்படவில்லை.
கி. பி. 1494 ல் ( ஹிஜ்ரி 913 ல் ) சிங்கள மன்னா்களாலும் கெளரவம் பெற்ற மீரா உம்மா என்ற செல்வந்தப்பெண்மணி முகையதீன் அப்துல் காதர் ஜெய்லானி தர்காவை நிா்மாணிப்பதற்காக ஒரு பெரிய காணி யை ( இன்று நகரின் மையப் பகுதி ) அன்பளிப்பு ச் செய்தார். ( தொடரும்) -Professor Anes-
0 Comments