Subscribe Us

header ads

கல்பிட்டி வரலாற்று சுவடுகள் - 3

கல்பிட்டி நினைவுகள் - 3

http://www.kalpitiyavoice.com/2020/06/blog-post.html (Part 1)
http://www.kalpitiyavoice.com/2020/06/2.html  (Part 2)

வரலாற்றை இழந்த கல்பிட்டிக்கு ஒல்லாந்தக் கோட்டை ஒரு வரலாற்றுஅத்தாட்சி. ஒல்லாந்தருக்கு முன்னர் 16ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் கல்பிட்டிக்குள் பிரவேசித்த போர்த்துக்கேயா் பாதுகாப்புக்கும் வர்த்தகத்தை க் கட்டுப்படுத்துவதற்கும் மூலோபாய அமைவிடம் ( Strategic location )எனக் கல்பிட்டியை க் கருதினா்.

பண்டங்கள் ஏற்றி இறக்கும் இறங்குதுறைப் பகுதியில் கடல் ஒரத்தையும் உட்படுத்தியதாக கோட்டை ஒன்றைக் கட்டுவதற்கு திட்டங்கள் வகுத்து அதற்குப் பொருத்தமான இடமும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதை அவர்களால் நிறைவேற்ற முடியாது போய்விட்டது. இந்தியத் துறைமுகங்களில் இருந்து இங்கு பொருட்கள் இறக்குமதி யாகிக் கொண்டிருந்தன. இங்கு சேகரிக்கப்பட்ட பொருட்களை இந்தியக் கப்பல்கள் ஏற்றி செல்லும். இந்த வர்த்தகத்தைக் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது அவர்களின் நோக்கம். அடுத்த து கடல் மற்றும் தரைவழிப் பாதுகாப்பு.

போா்த்துக்கேயா் ஆசைப்பட்டனர், திட்டங்கள் வகுத்தனர் ஆனால் அதை நிறைவேற்றி வெற்றி கண்டவர்கள் ஒல்லாந்தா்கள். ஒல்லாந்தர் அதிக காலம் இங்கு நிலை கொண்டிருந்தனா். பாதுகாப்பு நோக்கில் கல்பிட்டியும் புத்தளமும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என ஒல்லாந்தா் கருதினர் , புத்தளம் நகரிலும் கடல் ஏரி க் கு அருகில் ஒரு கோட்டையை நிா்மாணித்தனா். அந்தக் கோட்டை அழிந்து விட்டது. கல்பிட்டியைப் போல் இதுவும் புத்தளம் துறைமுகத்திற்கு அருகில் தான் கட்டப்பட்டிருந்த.100 பேரைக் கொண்ட ஒரு காவல் அரணும் இருந்து ள்ளது.

7,8 வயதில் 1956, 57களில் வாப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு கல்பிட்டி சின்னக் குடியிருப்பு பிரதான பாதையில் செல்லும் போது நான் ஆச்சாியத்துடன் கோட்டையை ப் பார்த்து ள்ளேன்.

நாலா பு றத்திலும் 100 அடி உயரப் பாதுகாப்புக் கோபுரங்கள், உயர் ந்த கோட்டை ச் சுவர்கள் அதைப் பார்த்தவாறு அப்போது அங்கிருந்த பு. அ. மு. கடை ( restaurant with mltipuerpose shop) ஒரு கூரையின் கீழ் என்று ம் கூறலாம். மலையாள வார்த்தைகருக்குச் சொந்தமானஅந்தக்கடையைக் கடந்து சென்றால் கம் சபா அதனைக் கடந்து வலது புறம் திரும்பினால் இறங்கு துறை( jetty) நோக்கிச் செல்லும் பாதை வரும்.

ஜெட்டிப்பாதையின் வலது புறம் VOC அடையாளம் இடப்பட்ட பெரிய மரக்கதவு களுடன் கூடிய கோட்டை முகப்பு பகுதி. இடதுபுறம் சிறிய நீண்ட காாியாலயத்தொகுதிகள் . அதில் ரேகு, சுங்கவரி காரியாலயம் என்ற பெயர்ப் பலகை இருந்தது. அதைக் கடந்து சிறிது தூரம் கடல் நோக்கிச் சென்றால் ஜெட்டி. கரையில் இருந்து 500,600 யார் தூரம் வரை கடல் மேல் பாதைபோல் பாலம். சற்று ஆழமான இடம் . இருபுறமும் பெரிய மரக்கலங்கள், டெங்கி படகுகள் ,பெரிய வள்ளங்கள், உடைந்த நிலையில் பல மரக்கலங்கள். அந்த பகுதி யே மரக்கலங்களால் சூழப்பட்டிருந்தது. அவை பெரும்பாலும் மீன்பிடிப் படகுகள் அல்ல. பொருட்களை கொண்டு செல்ல க்கூடிய வை. பல படகுகள் கைவிடப்பட்ட நிலையில் இருந்தன. 1958 கு முற்பட்ட காட்சி கள் இவை.

கண்டி மன்னா்களுக்கும், தென்னகக் கடல்வணிகா்களுக்கும் பல நூற்றாண்டுகளாகக் கை கொடுத்த துறைமுகம் அது .16,17,18,19வரை அதன் ஏற்றுமதி இறக்குமதி செயல் பாடு கள் உச்ச நிலையில் இருந்தன. பொருட்களைப் பாதுகாக்கும் களஞ்சிய சாலைகளும் கிட்டங்கிகளும் இருந்தன. கோட்டை யும் களஞ்சிய சாலையாக இருந்து ள்ளது.கப்பல்கள் திருத்தும் நிலையங்கள் களும் இங்கிருந்துள்ளன.

புத்தளம் துறைமுகத்திற்குக்குத் தரைவழியாகக் கொண்டு வரப்படும் பொருட்கள் சிறு படகுகள் மூலம் கல்பிட்டித்துறைக்கு கல்பென்டைன் நீர் ஏரி ( 28,30 மைல் தூரம் ) வழி யாகக் கொண்டு வரப்படும். தமது உள் நாட்டுத் துறைமுகம் என்று கண்டி மன்னர்கள் மார் தட்டிக் கொண்ட துறைமுகம் புத்தளம் துறைமுகம். அதற்கும் கல்பிட்டியிற் போல கரையில் இருந்து கடலின் உள்பகுதிவரை 600, 700 யார் நீளமான இறங்கு துறைப் பாலம் இருந்தது.

வாப்பாவுடன் 1956,1957களில் முதலில் புத்தளம் நகருக்குச் சென்ற போது புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்குக் கிட்டிய தூரத்தில் சிதைந்து பாதி நீரில் அமிழ்வது போல அந்தப் பாலத்தைப் பார்த்து ள்ளேன். புத்தளம் மறைந்த நாளிர் B. A (Hon), சுற்றாடல் செயற்பாட்டாளர் S.M. முபாரக் ( 80 வயது இருக்க லாம்) மற்றும் அவர்களின் நண்பர்கள் ஓய்வு நேரங்களில்அந்தப் பாலத்தில் நின்று தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் வழக்கம் பற்றிக் கூறி உள்ளார் கள். ஆனால், இன்று அதன் நிலை என்ன?

கடலுக்குள் தூரத்தில்அரை அடி உயரத்தில் தெரியும் ஒரு சிறிய கம்பித்துண்டுதான் இன்று இருக்கும் ஒரே சாட்சியம். புத்தளம் அநியாய மாக இழந்த வைகளில் இதுவும் ஒன்றாகும். ( தொடரும் ) -Professor Anes-

Post a Comment

0 Comments