Subscribe Us

header ads

கல்பிட்டி வரலாற்று சுவடுகள் - 2


கல்பிட்டி நினைவுகள் -2

http://www.kalpitiyavoice.com/2020/06/blog-post.html (Part 1)
பொதுவாக இலங்கை வரலாற்று க்கும் சிறப்பாகத் தமிழ் முஸ்லிம் களின் சில பூர்வீகச் செய்தி களுக்கும் சைமன் காசிச்செட்டியின் நூல்கள் நமக்கு உதவுகின்றன.

கல்பிட்டி, புத்தளம் முஸ்லிம் களின் வரலாற்றை தெரிந்து கொள்ளுவதற்கும் பண்பாட்டினை ஆராய்வதற்கு ம் பல விஷயங்களை அவர் விட்டு ச் சென்று ளார். பன்மொழி அறிவாளர், பல நூல்களை எழுதியவர், அறிஞர், கல்பிட்டியின் கல்விக்காக உழைத்தவா் காசிச் செட்டி. அவர் பற்றி உள்ளூர் கல்வி வட்டாரத்தில் அதிகம் பேசப்பட வில்லை.


உயர் தரம் படிக்கும் போது புத்தளம் புவாத் மெளலவி காசிச் செட்டி யின் சிலோன் கெஸட்டியரைப் படிக்கத் தந்தார் . உள்ளூர் வரலாற்றில் அக்கறை உள்ளவர் புவாத்மெளலவி. ஆனால் அதன் ஆசிரியர் பற்றி நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வரலாற்று ஆர்வம் உள்ள புத்தளம் நகரில் சிலரிடம் கெஸட்டியர் இருந்ததைப் பின்னர் அறிந்து கொண்டேன். காசி ச் செட்டி அதை எழுதி முடித்த காலம் 1833. அது 1834ல் வெளிவந்தது.

கெஸட்டியரில் நான் முதலில் தேடி ப்படித்தது பள்ளிவாசல் துறை . பள்ளிவாசல் துறை எனது ஊர். கல்பிட்டிப்பகுதியில் அமைந்திருக்கும் சிறிய கடலோரக் கிராமம். இதைச் சூழவும் சிறிது தூரத்திலும் இன்னும் பல கிராமங்கள் உள்ளன. இக்கிராமம் பற்றி காசி ச் செட்டி தந்து ள்ள குறுந்தகவல் இவ்வாறு உள்ளது.
பள்ளிவாசல் துறை அக்கரைப் பற்றுவில் கல்பிட்டிக்குத் தென் மேற்குப் பகுதியில் 5 மைல் தொலைவில் கல்பென்டைன் குடாவில் அமைந்திருக்கும் ஒரு கிராமம். இங்கு சுமார்1000 குடிமக்கள் வாழுகின்றனா். சிறு அளவில் துணி உற்பத்தி நடைபெறுகிறது. பெருந் தொகையான நாட்டு மாடுகளும் கழுதைகளும் இங்குள்ளன.(Calpentyn - டச்காரா் கல்பிட்டியை இவ்வாறு அழைத்தனர்).

குறுந்தகவலாக இருந்தாலும் ஆழமான உண்மைகள் இதில் உள்ள ன.18ம் 19ம் நூற்றாண்டு சூழ்நிலை களையும் இது பிரதிபலிக்கிறது . எனது வாப்பாவிடம் மாத்திரம் குடும்பச் சொத்தாகவந்த 100 கும் அதிகமான மாடுகள் இருந்தன . மற்றும் சிலர் இதனிலும் அதிகமான தொகையை ப் பெற்றிருந்த னர். இன்னும் சில குடும்பத்தினருக்கு 5 , 10 என்று மாடுகள் இருந்தன. சிலரிடம் ஆட்டுப்பட்டிகள் இருந்தன . நீங்கள் நினைப்பது சரி ஊர் நிறைய ஆடு மாடுகள் தான் . மாடுகளின் மேய்ச்சலுக்கு புற்றரைகள் இருந்த ன .நீர் அருந்த சிறு குளங்களும் நீர் நிலைகளும் இருந்தன. பால், தயிர், நெய் க்குப் பஞ்ச மே இருக்கவில்லை.
மாலை நேரங்களில் அநேக மாடுகள் உரிமையாளர்களின் வீடு களுக்கு வருவது வழக்கம். 20,30 மாடுகள் எங்கள் வீட்டு வாசலுக்கு வந்து விடும். வாப்பாவின் தாயார்( வாப்பிச்சா), ம்மா, சில சமயங்களில் நான் அவற்றை வரவேற்று புண்ணாக்கு தண்ணீர் இலைகுழைகள் தருவோம். ஒவ்வொரு மாட்டின் சரித்திரத்தை யும் வம்ச விபரங்களையும் ம்மாவும் வாப்பிச்சாவும் நன்கு அறிந்து இருந்தனர். மாடுகள் எங்கள் மீதும் நாங்கள் அவற்றின் மீதும் பரிமாறிக் கொண்ட அன்பு எல்லையற்றதாக இருந்தது.

இவ்வளவு மாடுகள் இருந்த போது ம் எங்கள் ஊரில் கசாப்புக் கடை கிடையாது. அடுத்த ஊர்களிலும்தான். கல்பிட்டி ஒரு பட்டினம் அங்கு இறைச்சி க் கடைகள் இருந்த ன. வாப்பாவும் இதில் கண்டிப்பாக இருந்தார். இறைச்சி க் காக யார் மாடு வாங்க வந்தாலும் பதில் இல்லை தான். பெருநாள், கந்தூரி , போன்ற சில விசேட தினங்களில் தான் ஊர் மக்கள் மாட்டிறைச்சியை நாடு வாா்கள. அநேக கிராமங்களின் நிலை இதுதான்.
பள்ளிவாசல் துறையில் பெரிய எண்ணிக்கையில் கழுதைகள் இருந்தன. நீண்ட புல் தரைகளும் குடிநீர் வசதி களும் இதற்குக் காரணமாக இருக்கலாம். மாடுகளோடு சேர்ந்து கழுதைகளும் மேய்ச்சலில் ஈடுபடும். ஊருக்குள்ளும் அவை வரும் . யாருக்கும் தீங்கு செய்யாத அப்பாவி மிருகம். அதற்கு உரிமையாளர்களும் இருந்தார்கள்.ஆனால் அதிகமாகவை உரிமையாளர்கள் அற்றவை. 1960கள் வரை இங்கு சுமார் 200கும் அதிகமான கழுதைகள் இருந்திருக்க வேண்டும். தவிர புத்தளத்தின் மற்றும் சில பகுதிகளிலும் கழுதைகள் பிரசித்தம். பள்ளிவாசல் துறை உள்ளிட்ட ஏனைய பகுதிகள் பல வற்றிலும் இன்று அது அருகிச் செல்லும் இனம்.
பள்ளிவாசல் துறையில் புடவை உற்பத்தி நடந்து ள்ளது என்பது காசிச் செட்டியின் மற்றொரு பதிவு. மன்னாரிலும் புத்தளத்தின் சில பகுதிகளிலும் டச் மற்றும் ஆங்கிலேயர் காலங்களில் பருத்தி உற்பத்தி க்கும் புடவை உற்பத்தி க்கும் ஊக்கம் அளிக்கப்பட்டது. பள்ளிவாசல்துறையிலும் இது நடந்ததா? ஆடு, மாடுகள் வளர்ப்பு டன் பருத்தி உற்பத்தி செய்வதிலும் மக்கள் ஈடுபட்டிருக்கலாம்.
காசி ச் செட்டி திரட்டிய இத் தகவல்கள் சந்தேகமின்றி 17ம், 18ம் நூற்றாண்டிற்குரியவை . தனது ஊரான கல்பிட்டியில் இருந்து 5 மைல் தொலைவில் இருந்த பள்ளிவாசல் துறை பற்றி அவர் நன்கு அறிந்திருப்பார் .

தென் னைச் செய்கை பள்ளிவாசல் துறையில் அறிமுகம் ஆவதற்கு முன்பு மக்கள் வானம் பார்த்த வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர் என்றும் சில போது புழுதி வயல் ( மழை குறைந்த இடங்களில் செய்ய க்கூடியது) முறையில் நெல் செய்கையில் ஈடுபட்டிருந்தனர் என்றும் வாப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். ( புத்தளம் பிரதேசத்தில் புழுதி வயல் - வாசல் - என்று ஒரு ஊரும் இருக்கின்றது) பருத்தி ச் செய்கை புத்தளம் நகருக்கு அருகில் காணப்பட்டதாகச் சில தகவல்கள் உள்ளன. பள்ளிவாசல் துறையில் 18ம் நூற்றாண்டில் துணி உற்பத்தி நடைபெற்றிருக்கலாம். 

( தொடரும்).-Professor Anes-

Post a Comment

0 Comments