கல்பிட்டியிலுள்ள கடற்படை முகாமில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொஹேத்துவாரம பகுதியிலுள்ள முகாமில் நேற்று இரவு இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டில் கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படையை சேர்ந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்படவுள்ளனர்.
துப்பாக்கி சூடு மேற்கொண்ட சிப்பாய் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அவர் காட்டில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இரவு முழுவதும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியுள்ளது. பின்னர் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
0 Comments