Subscribe Us

header ads

கல்பிட்டி வாழ் மக்களுக்கோர் அபாய எச்சரிக்கை.



அண்மைய சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன் டெங்கு நோயினால் பல உயிர்களை பலி கொடுத்தும் பலர் குடும்பங்கள் டெங்கு நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவல நிலை இன்னும் எம் மனதை விட்டு அகலவில்லை .

ஆகவே மீண்டும் ஒரு துர்பாக்கிய நிலைக்குத் முகம் கொடுக்காமல் இருப்பதற்காக வரும் முன் காக்கும் முகமாக தமது சுற்றுப் புற சூழலை சுத்தமாகவும் துப்புரவாகவும் வைத்துக் கொள்ளுமாறு கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அறிவித்தல் விடுத்துள்ளது இந்த அறிவித்தலை மீறும் பட்சத்தில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

எம் குடும்பத்தையும் ஊரையும் டெங்கு நுளம்பிலிருந்து பாதுகாப்போம் .

-R Hussain-

Post a Comment

0 Comments