Subscribe Us

header ads

கல்பிட்டி பிரதேச சபை தலைவரை சந்தித்த வர்த்தக சங்க உறுப்பினர்கள்.



கல்பிட்டி நகரில் வியாபாரம் செய்து வரும் வர்த்தகர்கள் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களை சந்தித்து கல்பிட்டி கடற்படையினரால் 21திகதி தீவிரவாத தாங்குதலை தொடர்ந்து தங்களுடைய வியாபார ஸ்தாபனங்கள் அமைந்திருக்கும் வீதி மூடப்பட்டுள்ளதினால் மக்கள் நடமாட்டம் குறைந்து சூனியப் பிரதேசமாக காணப்படுவதினால் வியாபாரங்கள் பெரிதும் குறைந்து காணப்படுவதாகவும் இவ்வாறு நிலைமை தொடர்ந்தால் வியாபார ஸ்தாபனங்களை மூட வேண்டிய நிலமை ஏற்படும் என்று கவலை தெரிவித்ததோடு இதற்கான சரியான தீர்வை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டனர் .

வர்த்தக சங்க உறுப்பினர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்கள் உடனடியாக இது சம்பந்தமாக கல்பிட்டி கடற்படை உயர் அதிகாரிக்கு கடிதம் மூலம் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதோடு,தாம் கடற்படை உயர் அதிகாரிகாரியை சந்திந்து சரியான தீர்மானம் ஒன்றை பெற்றுத்தருவதாகவும் வர்த்தக சங்க பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் J.M.தாரிக் அவர்களும் கலந்து கொண்டார்.

இவ்வீதி மூடப்பட்டுள்ளதினால் அப்பகுதியில் அமைந்திருக்கும் கல்பிட்டி ப.நோ.கூ.சங்க பெற்றோல் நிரப்பு காணப்படுவதினால் தாங்களும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் ப.நோ.கூ.சங்க தலைவர் தெரிவித்தார்.

-R Hussain-




Post a Comment

0 Comments