நாலு வருடத்துக்கு முதல் இவர் ஒரு ஸீரோ. இப்போது சிறிலங்காவில் இவரொரு ஹீரோயின்பியுமினி, மாத்தளையில் இருந்து உக்குவளைக்கு சென்று, அங்கிருந்து காட்டுக்குள் நாலு கிலோமீட்டர் தூரம் மேடு பள்ளம் ஏறி இறங்கினால், பியுமினியையும்,அவரது குடும்ப உறுப்பினர் களையும், தொழில் சாலையையும், தொழில்சாலை ஊழியர்களையும் தரிசிக்கலாம்.
உயர்தர கல்வி படிக்கும் போதே, எல்லோருக்கும் வரும் காதல் நோய் பியுமினிக்கும் வந்தது. அது ஜுரமாக மாறி படிப்பை பாதியில் விட்டு விட்டு கணவருடன் ஓடி, ஓடி,ஓடி, ஓட முடியாமல் நிற்கும் போதுதான் பியுமினிக்கு பசி எடுத்துள்ளது.
ஆனால் பியுமினி புத்திசாலி, பசி எடுத்ததும் உடனே போய் சாப்பிடாமல், தொடர்ந்து சாப்பிட ஏதாவது வழி உண்டா என யோசித்துள்ளார்.
பியுமினியின் கணவருக்கு சமைக்கத்தெரியும்,ஆம் மாத்தள டவுணில் ஒரு குட்டி ஆப்ப கடை திறந்து வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இவர்களது முன்னேற்றத்தை பொறுக்க முடியாத கடை உரிமையாளர் , இரவோடிரவாக கடையைவிட்டு விரட்டி, இவர்களை மீண்டும் நடு வீதிக்கு தள்ளியுள்ளார். ஆம். இது ஸ்ரீலங்கா மண்ணின் மகத்துவம்.
கையிருப்பும் குறைந்துவிட்டது, கையில் இருந்த பதினைந்தாயிரம் ரூபாவில்,மீண்டும் வீதி ஓரத்தில் ஒரு தேங்காய் ரொட்டி ( பொல் ரொட்டி ) கடை திறந்துள்ளனர். எதிர்பார்த்த இலாபம் இல்லை.
இருவருக்கும் மூன்று நேரம் சாப்பிட முடியவில்லை.பியுமினி நன்றாக பாடுவார், பகலில் பெட்டிக்கடையில் வியாபாரம், இரவில் பாட்டுக்கச் சேரிகளில் பாடி பணம் புரட்டத் தொடங்கினார்.
பியுமினி ஒரு குட்டி யானை போன்றவர், அவருக்கு இந்த உழைப்பெல்லாம் சோளப்பொரி போன்றே இருந்தது.
உழைக்கவேண்டும், உழைத்து காட்ட வேண்டும், தனது தாய், தந்தை, கணவரது தாய் தந்தை எல்லோர் முன்னிலையிலும் போய் திமிருடன் நின்று, அம்மா நானும் என் கணவரும் சொந்தக்காலில் நிற்கின்றோம் அம்மா என்று சொல்லி பீறிட்டு அழவேண்டும் என்ற வெறியுடன், தனது குட்டி பெட்டிகடைக்கு வருவோர் போவோரிடமெல்லாம் தனது குமுறலை கொட்டி கொண்டிருந்தார் பியுமினி.
இவள் ஒரு ஓட்டை வாயும் கூட, வள வள வள என வெட்கம்,ரோசம்,மானம்,மரியாதை எதுவுமின்றி எல்லோரிடமும் அழுது புலம்பி விடுவாள். யெஸ் அவளது புலம்பல் யாரோ ஒரு ஸ்ரீலங்கனின்,இங்கிலாந்தில் வசிக்கும் ஸ்ரீலங்கனின் காதில் விழுந்துள்ளது. ஆம். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் அடுத்த வீட்டில் என்ற தத்துவம் பியுமினிக்கு புரிய வைக்கப்பட்டது.
அடுத்த நாளே ஒரு ஓலைக்குடிசைக்குள் உட்கார்ந்து கிட்டதட்ட ஆயிரம் முறுக்கு செய்து, பொலித்தீனில் அடைத்து கொழும்பில் உள்ள பிரபல முறுக்கு மொத்த வியாபாரியின் கடைக்கு பியுமினி கணவருடன் அனுப்ப பட்டார்.
முறுக்கு முதலாளி உடனடியாக இவர்களது பொருளை நிராகரித்தார்.அடுத்தநாளும் சென்றார், அழுத்தம் திருத்தமாக நிராகரித்தார். ஆனால் இவள் ஒரு பிடிவாதக்காரி.
அத்துடன் ஐம்பது முறுக்கு போத்தலுக்காவது ஒப்புதல் எடுக்காமல் மாத்தளைக்கே வரக்கூடாது என பியுமினிக்குஅந்த ஆலோசகரால் கட்டளை இடப்பட்டிருந்தது.
பியுமினியின் கணவர் மாத்தள தம்புள்ள பிரதான வீதியில் ஒலைகொட்டகையில் பொல் ரொட்டி விற்றுக்கொண்டிருந்தார், பியுமினி பெட்டா பஸ் நிலையத்தில் ஒண்டரை மாதம் நாயாய், பேயாய் அலைந்தார்.ஆம் என்னால் முடியும் என்ற வெறியுடன் அலைந்தார்.
யெஸ். Done.அடிமேல் அடி அடித்தால் முறுக்கு விற்கின்ற முண்டாசுக்கரனுகளும் குப்புற உழுவார்கள் என்பதற்கு பியுமினி ஒரு எடுத்துக்காட்டு.
அப்போது ஆறு போத்தல் பாம் ஒயில் கடனுக்கு கேட்டபோது, போடி போ என்று சொன்ன குருநாகல எண்ணெய் கிடங்குகாரர், கம்பளை அரிசி ஆலை உரிமையாளர், கொழும்பு முறுக்கு முதலாளி அனைவரும் இப்போது பியுமினியின் வரவுக்காக Waiting. but she is always busy. இந்த கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போது (26-8-2019) பியுமினி லொறியில் ட்றைவிங் செய்து கொண்டு யாழ் மருதனாமடத்தை நோக்கி 7000 ஏழாயிரம் முறுக்கு போத்தல்களுடன் போய்க் கொண்டி ருக்கின்றார்.
இரண்டு லொறி, இருபது நேரடி ஊழியர்கள், தாய் தந்தை,மாமா, மாமி, தங்கைகள், மதினிகள், மச்சான்மார், அடுத்த வீடு, ஏன் அந்த கிராமத்தில் உள்ள ஏழை குழந்தைகளுக்கெல்லாம் பியுமினி ஒரு கோட் மதர்.
0 Comments