நன்றி- பிரதீப் கமகே
ஓஹியாவில் இருந்து / ஹட்டன் சமவெளி வரையிலான பாதையானது இலங்கையின் மிக அழகிய பாதைகளில் ஒன்றாகும். இந்த பாதையில் நடைபவணி என்பது மிகவும் சவாலானது, ஆனால் இந்த நடைப்பயணத்தில் ஆச்சரியமூட்டும் பல விசித்திரமான இயற்கை காட்சிகளை நீங்கள் அனுபவிக்க முடியும், சிலவேளை இந்த பயணம் உங்கள் வாழ்க்கையின் சிறந்த பயண அனுபவங்களில் ஒன்றாக இருக்கும் .
.
முழு பயணமும் சுமார் 23 கி.மீ ஆகும், இதில் ஒரு குறுக்குவழியும் உள்ளது , இது பயணத்தின் மொத்த தூரத்தை 8 கி.மீ குறைக்கின்றது , பெலிஹுலோயாவிலிருந்து ஓஹியாவுக்கு செல்கின்ற குறுகிய பாதை. இந்த பாதை கலுபஹான விலிருந்து தொடங்குகிறது, பழைய பாழடைந்த எஸ்டேட் சாலைகள் மற்றும் பல தோட்டங்கள் வழியாகச் சென்று இறுதியில் ஓஹியாவில் இந்தப்பாதை முடிகிறது.
நீங்கள் கால்நடையாகவும் மற்றும் வாகனங்கள் மூலமூம் பயணம் செய்யலாம். நீங்கள் நடக்கத் தேர்வுசெய்தால், தூரத்தில் நீல மலைகள், சிறிய நீரோடைகள் மற்றும் இலங்கையின் தெற்கு சமவெளிகளின் விசித்திர காட்சிகள் உட்பட இன்னும் பல கண்களுக்கு விருந்தளிக்கும் பல ரம்மியமான காட்சிகளை ரசிக்கலாம். பாதை நிலைமைகள் மோசமாக இருக்கும் , அவதானம் நீங்கள் கால்நடையாக பயணிக்க விரும்பினால், உங்களிடம் போதுமான தண்ணீரும் உணவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
அல்லது வாகனம் மூலம் பயணம் செய்ய நீங்கள் விரும்பினால் அடிப்படையில் 4wheel வாகனம் அல்லது பைக் தேவைப்படும். பாதை மிகவும் சிக்கலானது காரணம் ஒற்றை வழிப்பாதை நீங்கள் பயணித்துக்கொண்டிருக்கும்பொழுது இன்னொரு வாகனம் உங்களது எதிர் திசையில் இருந்து வந்தால் பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்
. பாதை மிகவும் ஆபத்தானது ஆகையால் தயவுசெய்து வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருங்கள்.
இந்த பயணத்தின் முதல் மற்றும் முக்கிய அம்சம் என்னவெனில் இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான பம்பகந்த நீர்வீழ்ச்சி இந்த நீர்வீழ்ச்சியின் கண்கொள்ளா காட்சியை கண்ட பிறகு நீங்கள் ஒரு பழங்குடி குடியேற்றத்துடன் உள்ள ஒரு அழகான சாலையில் நுழைவீர்கள்.
கிரானைட் துண்டுகளால் மட்டுமே பாதை இருப்பதால் இதன் மேல் பகுதி வழுக்கும். இதை நீங்கள் கடந்துவிட்டால், நீங்கள் ஒரு முற்றுமுழுதான இயற்கை தளத்திற்குள் நுழைவீர்கள், அங்கு மத்திய மலைகளின் தெற்குப் பகுதியின் கண்கவர் காட்சி . பனிமூட்டம் நிறைந்த அழகிய வனாந்தரங்கள் இன்னும் பல கண்கொள்ளா இயற்க்கை காட்சிகளை கண்டு ரசிக்க முடியும்
பாதையில் எந்த வித வழிகாட்டல் அறிவுறுத்தல் பலகைகளும் இல்லை, மேலும் இந்தப்பாதை உங்களை நேரான வழியில் இருந்து பாதை மாற்றி தவறான பாதையில் திசை திருப்பிவிடவும் கூடும் ஏனென்றால் இதில் பல பாதை சந்திப்புக்கள் நிறைந்து காணப்படுகின்றன .
நீங்கள் ஒரு வாகனத்தை எடுத்துக் கொண்டால், போதுமான அளவு எரிபொருள் வைத்திருங்கள் மற்றும் வாகனத்தின் நிலை மிகவும் நன்றாக இருக்க வேண்டும், மற்றும் சாரதி வாகனம் ஓட்டுவதில் நல்ல முன் அனுபவமுள்ளவராக இருத்தல் நல்லது
இது உங்கள் வாழ்க்கையின் சிறந்த அனுபவங்களில் நிச்சயமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
மற்றும் நீங்கள் நீங்கள் இந்தப்பாதையால் செல்லும்ப்போது பல குடியிருப்புகளில் உள்ள கிராம மக்கள் தோட்டத் தொழிலாளர்களை சந்திக்கலாம். அவர்கள் மிகவும் தாழ்மையானவர்கள், அப்பாவிகள் மற்றும் உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள். கடந்து செல்லும் போது அவர்களை வாழ்த்துங்கள்.
தயவுசெய்து எந்த பிளாஸ்டிக் கழிவுகளையும் இயற்கையின் அழகுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவித செயல்களையும் செய்ய வேண்டாம். தயவுசெய்து கவனத்துடன் பயணிக்கவும், சுற்றுச்சூழல் மரபுகளுக்கு இணங்கவும், இயற்கையிலிருந்து எந்த தாவரங்களையும் விலங்குகளுக்கும் தீங்குவிளைவித்துவிடாமல் பல இயற்கை உங்களுக்கு வழங்கும் விசித்திர அனுபவம் மற்றும் அழகான நினைவுகளுடன் உங்கள் கால் தடங்களை மட்டும் பதித்து விட்டு திரும்புங்கள்.
0 Comments