வருடந்தோறும் சவுதி மன்னரின் விருந்தினர் திட்டத்தின் கீழ் உலகெங்கிலுமிருந்து இஸ்லாத்திற்காக உயிர் துறந்த தியாகிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஹஜ் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றனர்.
மன்னரின் விருந்தினர் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 17,000 பேர் ஹஜ் செய்துள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் இஸ்ரேலிய யூத பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட பலஸ்தீன முஸ்லீம்களே.
மன்னரின் விருந்தினர் எனும் இலவச ஹஜ் திட்டத்தை மன்னரின் சார்பாக மேற்பார்வையிட்டு நடைமுறைபடுத்துவது சவுதி இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதலுக்கான அமைச்சகமாகும். இந்த அமைச்சகம் தற்போது எகிப்து மற்றும் ஜோர்டானில் உள்ள பல்வேறு ஹஜ் சார்பான அமைப்புகளுடன் இணைந்து சிறப்பு விமானங்களில் பாலஸ்தீன தியாகிகள் குடும்பத்தைச் சேர்ந்த இரத்த உறவுகளை ஹஜ்ஜிற்கு அழைத்து வரும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments