நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர், டொக்டர் சாபியிடம் ஒப்புதல் வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டொக்டர் சாபி கருத்தடை செய்தார் என சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது என்ற காரணத்தினால், இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலமொன்றை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டுமென ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
சதஹம் செவன ஆசிரமத்தில் தமக்கு நெருக்கமான சிலரிடம் இது பற்றி ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
“இந்த டொக்டருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாது, அது தான் உண்மை. குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர், திவயின பத்திரிகையாளர் ஹேமந்த ரந்துனு மற்றும் குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆகியோர் உடைந்து போயுள்ளனர்.” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்த அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சினை காரணமாக வீதியில் இறங்கி நடக்க முடியவில்லை எனவும் ஏதாவது செய்து தமக்கு உதவுமாறும் கோருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
டொக்டர் சாபியை அச்சுறுத்தி அதன் ஊடாக குற்றத்தைச் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டு வருவதாகவும் தாமே அதனை செய்யப் போவதாகவும் ரதன தேரர் தமக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.
0 Comments