Subscribe Us

header ads

எங்கள் நாட்டின் சட்டம் புனித குர்ஆனுக்கு உட்பட்டதே: அமெரிக்காவில் சவுதி நீதியமைச்சர் எச்சரிக்கை!

எங்கள் நாட்டின் சட்டதிட்டங்கள் இறைமறையான அல்குர்ஆனுக்கு உட்பட்டதாக இருக்கின்றது. இறைவனால் இவ்வுலக மக்களுக்கு அருளப்பட்ட சட்டங்களையே நாங்கள் எங்கள் நாட்டில் கடைப்பிடிக்கின்றோம். என அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் இடம்பெற்ற சட்டத்தரணிகள், சட்ட ஆலோசகர்கள் மற்றும் மனித உரிமை அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் சவுதி அரேபியாவின் நீதி அமைச்சர் முஹம்மத் அல் ஈஸா எச்சரித்துக் கூறினார்.
முஹம்மத் அல் ஈஸா மேலும் கூறுகையில்.
எமது நாட்டின் சட்டங்களை இழுவுபடுத்தியும், மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட சட்டங்களை எமது நாடு கடைப்பிடிப்பதாகவும் உலக ஊடகங்களும், மனித உரிமை அமைப்புக்களும் பிழையாக எங்களை விமர்சித்து வருகின்றனர்.
இதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆளுமைமிக்க ஒரு நல்ல மனித சமுதாயத்தைக் கட்டடிக் காக்க அல்குர்ஆனின் சட்டங்கள் இவ்வுலகிற்கு இன்றியமையாதவை. இஸ்லாம் பற்றியும், அல்குர்ஆன் பற்றியும் அறியாத பல மேற்கத்தேயர்கள் இஸ்லாம் மீதுள்ள பொறாமையில், சவுதி அரேபியாவின் சட்டங்களை மாத்திரம் எதிர்த்து வருகின்றனர். விமர்சித்தும் வருகின்றனர். எங்களது சட்டங்கள் எப்போதும் மனித உரிமைகளுக்கு எதிரானது அல்ல.
சட்டத்திற்கு அமைய குற்றவாளிகளின் தலையைத் துண்டிப்பதையும், கையைத் துண்டிப்பதையும் சவுதி நிறுத்த வேண்டும். இதற்கு மாறாக வேறு சட்டங்களை ஏற்படுத்துங்கள் என எங்களை பலர் வற்புறுத்துகின்றனர். ஆனால், இச்சட்டங்களை, தண்டனைகளை எங்களால் மாற்ற முடியாது. ஏனெனில் குர்ஆனில் உள்ள சட்டங்களை மாற்றும் அதிகாரம் எங்களுக்குக் கிடையாது என்று அவர் கூறினார்

Post a Comment

0 Comments