பள்ளிவாயலுக்கு நாயை கூட்டி வந்து பரிசோதிக்காமால் பாம்பை கூட்டி வந்தா பரிசோதனை செய்ய சொல்கிறார்கள் என அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மை ஆனால் உலகத்தில் பெரும்பான்மை என்கிறார். நாம் மோதிப்பார்ப்போம் என்கிறார். இலங்கைக்கு எரிபொருள் வராது என கூறுகிறார். இது என்ன முட்டாள்தனமாக கதை.
முஸ்லிம் மக்கள் கடும் அலுத்தத்தில் இருப்பதாக அஸாத் சாலி கூறுகிறார். நாம் கிரிஸ்தவர்கள் அலுத்தத்தில் இல்லையா ? பள்ளிவாயலுக்கு மிருகங்களை கொண்டுவர கூடாது என்கிறார். பள்ளிவாயலுக்கு நாயை கூட்டி வந்து பரிசோதிக்காமால் பாம்பை கூட்டி வந்தா பரிசோதனை செய்ய சொல்கிறார்கள். குண்டு பரிசோதிக்கும் முறை ஒன்று உள்ளது .அது உலகம் ஏற்றுக்கொண்ட முறை.
அவர்களின் உடல் மொழியும் பிழை அவர்களும் கருத்து கூறும் முறையும் பிழை இவர்களின் கூற்றுக்களினால் சிங்கள மக்கள் மேலும் ஆத்திரமடைவார்கள்.இவ்வளவு பெரிய அனர்த்தம் ஒன்று நடந்த பின்னர் சிங்கள மக்களுக்கு சவால் விடுகிறார்கள்.
அவர்கள் பாரிய வேதனையில் இருப்பதாக கூறுகிறார்கள் . நாங்களும் பாரிய வேதனையில் இருக்கிறோம். முஸ்லிம் மக்கள் பாரிய வேதனைக்குள்ளாகியுள்ளதாக அஸாத் சாலி கூறுகிறார்.எமக்கு வேதனை இல்லையா என நான் கேட்க விரும்புகிறேன்.
தங்கள் இனம் ஒரு தவறை செய்துள்ளதால் அவர்கள் சற்று நடுநிலையாக செயற்பட வேண்டும்.
குண்டு தாக்குதலுக்கு முஸ்லிம்களே பொறுப்பு கூற வேண்டும். அல்லாஹு அக்பர் என கூறிய குண்டு வெடித்தார்கள், புத்த பெருமான் அல்லது இயேசுனாதரின் நாமத்தினால் அல்ல .
முஸ்லிம்களில் சிறு குழுவினரே இந்த விடயத்தில் தொடர்புபட்டிருந்த போதும் சிக்கிய அனைவரும் முஸ்லிம்கள்.எந்த ஒரு முஸ்லிம் தலைவரும் எமது சமூகத்தில் ஒரு பிழை நடந்து விட்டது என மன்னிப்பு கோருவதை நாம் காணவில்லை என ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார்.
0 Comments