Subscribe Us

header ads

குற்றச்சாட்டுகள் நிரூபிக்க தவறும் பட்சத்தில் விமல் வீரவன்ஸ அரசியலிருந்து விலகுவாரா? - ரிஷாத் பதியுதீன் கேள்வி


தன்மீது தொடர்ச்சியாக சுமத்திவரும் குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ நிரூபித்தால் அரசியலிருந்தும்  நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலகத் தயார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத்
பதியுதீன் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்க தவறும் பட்சத்தில் விமல் வீரவன்ஸ அரசியலிருந்து விலகுவாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவசன்ஸ இனங்களுக்கு இடையே குரோத உணர்வுகளையும் வைராக்கிய சிந்தனைகளையும் தொடர்ந்து ஏற்படுத்தி
வருகின்றார்.

தன்னைப்பற்றி பொய்யான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றார் என்றும் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் இனங்களுகக்கிடையே நல்லெண்ணத்தை வளர்ப்பதே பொறுப்புள்ள அரசியல்வாதியின் பண்பாகும்.

முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு எந்தக் காலத்திலும் ஆதரவளித்தவர்கள் அல்ல.

இந்த சிறிய நாட்டில் இன உறவு தளைத்தோங்குவதற்கு முஸ்லிம்களாகிய தாங்கள் பாடுபட்டு வருவதாகவும், உண்மை ஒருநாள் வெல்லும் என்பதை அனைத்து மதங்களினதும் போதனையாகும். என்றும் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments