( ஜெமீல் அகமட் )
கடந்த பயங்கரவாத காலத்தில் முஸ்லிம்கள் தமிழ் பிரதேசங்களுக்கும்
தமிழர்கள் முஸ்லிம் பிரதேசங்களுக்கும் செல்ல முடியாத சூழ்நிலையில் அன்று கல்முனை பிரதேச செயலகம் முஸ்லிம் பிரதேசத்தில் அமைந்து இருந்ததால் தமிழ் மக்கள் தங்களது அரச தேவைகளை நிறைவேற்ற அச்சம் கொண்ட போது அவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது தான் தற்கால அரச சேவை காரியாலயம் அதாவது இன்று சண்டை பிடிக்கும் உப பிரதேச செயலயமாகும்
கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கி வந்த இந்த காரியாலயம் அன்று ஆயுத குழுக்களால் தமிழ் பிரதேச செயலகம் என்று பிரகடனப்படுத்தப்பட்டது இன்னும் சிலரால் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்று பேசப்படுகின்றது ஆனால் இதை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இது வரை எந்த பிரதேச செயலகம் என்றும் அறிவிக்காத நிலையில் இனவாதம் பேசுகின்றவர்கள் பிரதேச செயலகம் என்று குறிப்பிடுவது அவர்களின் அறியாதன்மை என்றுதான் கூற வேண்டும்
அன்று யுத்தம் முடிவடைந்து மக்கள் இன ஐக்கியத்துடன் வாழ்ந்த போது இந்த காரியாலயத்தை மூடிவிட்டு கல்முனை பிரதேசத்துக்கான சகல கிராம சேவகர்களும் ஒரு காரியாலயத்தில் அதாவது தற்போது நவீன முறையில் கட்டப்பட்டு இருக்கும் கல்முனை உப பிரதேச செயலகத்தில் கடமை புரிவதற்கான ஏற்பாடுகளை அன்று அரசியல்வாதிகள் செய்து இருக்க வேண்டும் அப்படி அவர்கள் செய்யாத நிலையில் தான் இன்று இந்த பிரச்சினையை இனவாதிகள் தூக்கிப்பிடித்து இன ஒற்றுமையை குழைப்பதற்கு போராடி வருகின்றனர் இந்த நிலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களின் மனித நேய செயலும் ஒரு காரணம் என்றுதான் கூற வேண்டும் அவர் நினைத்து இருந்தால் இந்த காரியாலயத்தை எப்போதே மூடி இருக்கலாம் அவரிடம் உள்ளூராச்சி மாகாண சபை அமைச்சின் அதிகாரம் கூட இருந்தது ஆனால் அவர் செய்ய வில்லை அப்படி செய்து இருந்தால் இன்று இந்த போராட்டங்கள் வந்து இருக்காது என்பதை கல்முனை பிரதேச தமிழ் மக்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டும்
கல்முனை நகரை பொறுத்தவரை தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை அவர்கள் மிகவும் அண்ணியோகமாக ஒன்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்
அத்தோடு கல்முனை பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை ஆனால் தமிழ் மக்கள் நிராகரித்து இருக்கும் இனவாத அரசியல்வாதிகளுக்கு தான் பிரச்சினையாக இருக்கிறது அதனால் அவர்கள் எதிர் வரும் தேர்தலில் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக மக்களின் உரிமைக்கு போராடுகிறோம் என்ற நாடகத்தை கல்முனை பிரதேசத்துக்கு அப்பால் உள்ள அரசியல்வாதிகள் ஆடுகின்றனர் இதுதான் இன்று நடப்பது இதனால் இனக்கலவரம் உருவாகுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன அத்தோடு மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படுகின்றன இதனால் உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்பனவற்றை கை விட்டு விட்டு இந்த பிரச்சினை மிக விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் இதற்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
முஸ்லிம் மக்கள் தமிழ் பிரதேசங்களில் வியாபாரம் செய்யக்கூடாது என்று கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது அப்படி ஒரு தடை ஆரயம்பதி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது அதுபோல் இன்னும் பல பிரதேசங்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது ஆனால் இப்படியான #மோசமான #வியாபார#தடையை #தமிழ் #மக்கள் மீது முஸ்லிம் மக்கள் அல்லது முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறவில்லை இன்றும் முஸ்லிம் பிரதேசங்களில் தமிழ் மக்கள் அச்சமின்றி தொழில் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
முஸ்லிம்கள் நாட்டில் இன ஐக்கியத்துடன் வாழ வேண்டும் என்பது அவர்களின் கொள்கையாக இருக்கிறது அதனால் தான் தனது இன பயங்கரவாதியை முப்பது வருடம் பாதுகாக்காமல் மூன்று வார காலத்துக்குள் பயங்கரவாதிகளை காட்டிக்கொடுத்து நாட்டை பாரிய அழிவிலிருந்து பாதுகாக்க அரசாங்கத்துக்கும் இரானுவத்துக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியவர்கள் முஸ்லிம்கள் அவர்கள் தனது நாட்டுக்காக யாரும் செய்யாத கடமையை முஸ்லிம் மக்கள் செய்துள்ளனர் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது
தன இன பயங்கரவாதியை அழித்த இலங்கை முஸ்லிம்கள் என்று உலகம் வியர்ந்து பாராட்டுவது இனவாதிகளுக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்துகிறது அந்த வலியை தாங்க முடியாமல் துடிப்பவர்கள் கடந்த காலத்தில் அவர்களின் வரலாற்றை மறந்து முஸ்லிம் மக்களை இனவாதிகளாகவும் பயங்கவாதிகளாகவும் சித்தரித்து தங்களின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர் அது தான் இன்று கல்முனையில் நடக்கின்றது
யுத்த காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொண்டனர் ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் அன்று தனது மக்களுக்காக குரல் கொடுக்காமல் அமைதிகாத்து வந்தனர் அந்த நிலையில் தான் தமிழ் கிராமசேவர்கள் அச்சமின்றி தனது கடமையை மக்களுக்கு யுத்தம் முடியும் வரை செய்ய வேண்டும் என்பதற்காக தமிழ் பிரதேசத்தில் உருவாக்ப்பட்ட காரியாலயம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றால் அது இன ஒற்றுமையை சீர் குழைக்கும் விடயமாக இருக்க கூடாது என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது இந்த விடயத்தில் கல்முனை பிரதேசத்தில் ஒற்றுமையாக வாழும் அரசியல்வாதிகளும் மக்களும் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்தது.
0 Comments