இலங்கையில் வாத்துவ புகையிரத நிலையத்தில் பயணிகளுக்கும், வழிப்போக்கர்களுக்குமான இலவச வாசிகசாலை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
அவ் வாசிகசாலைக்கு ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் முகநூல் நண்பர்களிடமிருந்து இலவசமாகக் கிடைத்திருக்கின்றன. அவையே இப் படங்களில் உள்ளவை. மும் மொழிகளிலும் புத்தகங்கள் இருக்கின்றன.
முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இச் சேவையை புகையிரத நிலையத்துக்கு வரும் எவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். புத்தகங்களை வீட்டுக்குக் கொண்டு சென்று வாசிக்க விரும்புபவர்கள் மாத்திரம் அங்கிருக்கும் ஏட்டில் பெயர், முகவரியைக் குறிப்பிட வேண்டும்.
புத்தகங்களோடும், வாசிப்போடும் உங்கள் பயணங்களும் அமையட்டும். ❤️
- #From :- எம்.ரிஷான் ஷெரீப் -
0 Comments