‘வில்பத்து வன எல்லைக்குள் எந்தவொரு முஸ்லிம் குடும்பமும் குடியமர்த்தப்படவில்லை. சில தீயசக்திகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.’
‘அமைச்சர் ரிஷாத் பதியுதீனை, நேர்மையான ஓர் அரசியல்வாதியாக நான் காண்கின்றேன். அவர் தனது சமூகத்தின் விடியலுக்காகப் பாடுபடுகிறார். அவர்களுக்காகக் குரல்கொடுத்தும் வருகிறார். இதனைத் தவறெனக் கொள்ள முடியாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் நான் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகின்றேன்.’
‘வில்பத்து விவகாரத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்குக் கைகொடுத்து உதவ வேண்டும். அவரைப் பாதுகாக்க முன்வர வேண்டும். இந்த விடயத்தில் கட்சி அரசியல் பேதம் பார்க்க வேண்டாம். ரிஷாத்தின் நல்ல பணிக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்’ என்கிறார் பைஸர் முஸ்தபா எம்.பி
-SIDDIQI KARIYAPPAR-
0 Comments