Subscribe Us

header ads

வண்ணாத்தவில்லு பிரதேச சபையில் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்துக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.


கடந்த சில மாதங்களாக #cleanputtalam தினால் ஏற்படுத்தப்பட்ட பல்முனை தொடர் அழுத்தங்களின் ஊடாக,குப்பைத்திட்டத்தின் இதயமான வண்ணாத்தவில்லு பிரதேச சபையில் இன்று 28-03-2019 உத்தியோக பூர்வமாக திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்துக்கு எதிரான பிரேரணை 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.


மேட்படி பிரேரணை முன்கூட்டியே நிறைவேற்றப்பட்டதாக திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்திகளும் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது.

குப்பை திட்டம் நிகழும் குறித்த இடத்திலேயே நிறைவேற்றப்பட்ட இந்தப் பிரேரணை, நிச்சயம் எதிரிகளுக்கு ஒரு பலத்த இழப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


இவ்விடயத்தில் துணைநின்ற பொதுமக்கள், பிரதேச சபை அங்கத்தவர்கள் மற்றும், இன்றைய நிகழ்வை நேரடியாக வந்து ஒளி/ஒலிபதிவு செய்த Hiru, Shakthi, Derana மீடியாக்கள் அனைத்திற்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

#Cleanputtalam 
28-03-2019

Post a Comment

0 Comments