கற்பிட்டி நுரைச்சோலை பகுதியில் 14 கிலோகிராம் கேரளா கஞ்சா போதை பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சூட்சகமான முறையில் பெட்டி ஒன்றில் 2 கிலோ கிராம் வீதம் 7 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 14 கிலோ கிராம் கேரளக் கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
நுரைச்சோலை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 35 வயுதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
0 Comments