Subscribe Us

header ads

கல்பிட்டி அல் அக்‌ஷா தேசியப்பாடசாலையில் உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவு,கணிதப்பிரிவு ஆரம்பம்



எமது ஊர்மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகவிருந்த உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவு,கணிதப்பிரிவு பகுதிநேர வகுப்புக்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு 24.12.2018 அன்று ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அடுத்த வருட ஆரம்பத்தில் இருந்து பாடசாலையிலும் இவ்வகுப்புக்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இவ்வருட ஆரம்பத்தில் இருந்து இதனை ஆரம்பிப்பதற்காக பாடசாலை அபிவிருத்தி சங்கச்செயலாளர் I.N.M.M.ஹன்பல் உட்பட சங்க உறுப்பினர்களின் விடாமுயற்சியினாலும் Kps தலைவர் M.I.M.இன்பாஸ் ,எதிர்க்கட்சித்தலைவர் A.J.M.தாரிக் மற்றும் உறுப்பினர்களான திரு அக்மல்,பெளசான் ,றஸ்மினா பாஹிம்,மஞ்சுளாஆகியோரது முழு ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்ட கல்பிட்டி கல்வி அபிவிருத்தி மையம் இதனை மேற்கொள்ளவுள்ளது 

தலைவர் -பைருஸ் சமான்(ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர்)

செயலாளர் -A.M.றியாஸ்(Gs)

பொருளாளர்-M.C.M.ஹாரிஸ்(ஓய்வு பெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்)

அமைப்பாளர்-H.M.நிஜாம்தீன்

உப தலைவர் -A.S.சாஹிர் ஆசிரியர்

S.I.M. ஆஸ்தீன் ஆசிரியர் 

P.M.பாஹிம்(ப.நோ.கூ.ச.தலைவர்)
திரு ரவி 

M.றசீம்

இவ்வமைப்பு பகுதிநேர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்காக புத்தளம் விஞ்ஞானக்கல்லூரியிலும் இலங்கையின் பிரபலமடைந்த பாடசாலைகளிலும் பகுதிநேர வகுப்புக்களை நடாத்தும் ஆசிரியர்களான

நஜீப் sir-உயிரியல் 

நூமான் sir-பெளதீகவியல்

நிப்ராஸ் sir-இரசாயனவியல்

அக்ரம் sir-இணைந்த கணிதம்

தொடர்புகொண்டு எமது பாடசாலையிலும் விஞ்ஞானப்பிரிவை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அதன் செலவீனமாக மாதமொன்றுக்கு 3 இலட்சம் ரூபாய் என கணிக்கப்பட்டது இந்நிதியை திரட்டுவதற்காக Kps எதிர்க்கட்சித்தலைவர்A.J.M.தாரிக் அவர்களுடன் இணைந்து இவ்வமைப்பு ஊரில் உள்ள பல அமைப்புக்களோடு கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஊரில் உள்ள நலன் விரும்பிகளிடம் இப்பணத்தை பெறுவதாக முடிவு செய்யப்பட்டது 

அந்த வகையில் வீடுவீடாகச்சென்று எமது ஊரில் உள்ள திறமையான பிள்ளைகள் அதாவது க.பொ.த(சா/த)பரீட்சையில் அனைத்துப்பாடங்களிலும் திறமைச்சித்தி பெற்ற போதும் கலைப்பிரிவையும்,வர்த்தகப்பிரிவையும் 

தெரிவுசெய்யவேண்டிய நிர்ப்பந்தம் வருமானம் உள்ள சில பேர் வெளியூர்களுக்கு தங்களது பிள்ளைகளை அனுப்பி படிக்கவைத்தாலும் அவர்களுக்கு ஏற்படும் மனப்பாதிப்புக்கள்,அதிகப்படியான செலவீனங்கள் ,போக்குவரத்து அசெளகரியங்கள்,பாதுகாப்பற்ற தன்மைகளை எடுத்துக்கூறி எமதூரிலும் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி எமது எதிர்கால பிள்ளைகளை கல்விச்சமூகமாக உருவாக்க வேண்டும் என எடுத்துக்கூறினார்கள்

இதன் பயனாக சில நலன் விரும்பிகள் ரொக்கமாகவும் சில பேர் மாதாந்த சந்தாவாகவும் தருவதற்கு முன்வந்துள்ளனர் ஆகவே இவ்விடயம் இதுவரை தெரியாத நலன் விரும்பிகள் இதற்காகவேண்டி உதவ முன்வர விரும்புபவர்கள் எமது ஊரின் எதிர்கால நலன்கருதி இவ்வமைப்புக்கு பூரண ஒத்துழைப்பு தரவேண்டும் என இவ்வமைப்பு கேட்டுக்கொள்கின்றது 

மேலதிக தகவல்களுக்கு
I.N.M.M.ஹன்பல்-0712962519
A.J.M.தாரிக் -0770639800
S.I.M.ஆஸ்தீன்-0713601785

A/C no-125100150024224
மக்கள் வங்கி

-Ayaskhan- Teacher

Post a Comment

0 Comments