சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் தேசிய மட்ட போட்டிகளில் கடந்த (02-10-2018) நடைபெற்ற நீளம் பாய்தல் போட்டியில் பங்கு பற்றிய எமது கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை மாணவன் S.M.ரிகாஸ் தேசிய மட்டத்தில் திறமையான மாணவர்களுடன் நீளம் பாய்தல் போட்டியில் போட்டியிட்டு 6.45 மீட்டர் தூரம் பாய்ந்து ஐந்தாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.
இது தேசிய மட்ட போட்டிகளில் ஒரு சாதனையே இச்சாதனையை பெற்று தந்த மாணவர் S.M.ரிகாஸ் அவர்களே பாராட்டுவதோடு இன்று 04 ஆம் திகதி பங்கு பற்றவிருக்கும் மேலும் ஒரு போட்டியான முப்பாய்ச்சல் போட்டியிலும் இதை விட திறமையாக செயல்பட்டு சாதனை படைப்பதோடு ஊருக்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித்தர இறைவனிடம் பிரார்த்திப்பதோடு வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிப்போம்.
0 Comments