கத்தார் எயார்வெய்ஸ்யின் 25ம் ஆண்டு நிறைவையொட்டி 2 விமான டிக்கட்டுக்கள் வழங்கப்படுவதாக கடந்த சில காலங்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன. குறிப்பாக வாட்ஸ்அப்களில் தான் இந்த செய்திகள் அதிகம் வலம் வருகின்றன. இது தொடர்பாக நாம் (உண்மையின் பக்கம்) இன்று கத்தார் எயார்வெய்ஸ் உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்துக்கு தொடர்பு கொண்டு கேட்டோம்.
இது தொடர்பாக கத்தார் எயார்வெய்ஸ் வெளியிட்டுள்ள அதிகார பூர்வ பதிலை இங்கு இணைத்துள்ளோம்.
"துரதிஷ்டவசமாக இது போன்ற செய்திகள் மோசடி செயற்பாடுகளில் ஈடுபடும் இணையத்தளங்களினால் மேற்கொள்ளப்படுபவையாகும். தலைமறைவாக உள்ள கிரிமினல்களினால் கத்தார் எயார்வெய்ஸ்யின் தகவல்கள், மற்றும் உங்களது (வாடிக்கையாளர்களின்) தனிப்பட்ட தகவல்களைப் திருட மேற்கொள்ளப்படும் சதிவேலையாகும். இங்கு யாரும் சென்று தனிப்பட்ட தகவல்களை வழங்கவேண்டாம் என்பதோடு இது தொடர்பான முறைப்பாடுகளை reportfraud@qatarairways.com.qa என்ற மெயிலுக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
Statement on Fake Anniversary Offer pic.twitter.com/krhXrCiKvX
0 Comments