ஜப்பானில் இயங்கும் புகையிரதங்கள் நேரசூசியில் குறிக்கப்பட்ட சரியான நேரத்திற்கு ஒரு செக்கன் கூட தாமதம் இல்லாமல் வந்துசேர்ந்து விடும். ஜப்பானிய போக்குவரத்தில் புகையிரத சேவைக்கு பாரிய பங்கு உண்டு! உலகின் தலைசிறந்த நாடுகளுள் ஒன்றான ஜப்பான் இன் வெற்றியில் புகையிரத சேவை பெரும் பங்களிப்பு வழங்குகின்றது. ஒரு நாட்டின் வளர்ச்சி , பொருளாதாரம் என்பன அதன் போக்குவரத்தில் பெரிதும் தங்கியுள்ளது. அவ்வாறான போக்குவரத்தில் வீதிப்போக்குவரத்தை காட்டிலும் புகையிரத போக்குவரத்து தங்குதடையின்றி செயற்படும்!
ஜப்பானில் புகையிரதங்கள் நேரசூசியில் குறிப்பிட்ட நேரத்தை விட சற்று தாமதம் ஆனாலும் குறிப்பிட்ட புகையிரத்ததில் உள்ள அனைத்து பயணிகளிடமும் புகையிரத பொறுப்பதிகாரி புகையிரதம் தாமதம் ஆனதற்காக மன்னிப்பு கோர வேண்டும் என்பது தான் விதி! மன்னிப்பு கோரப்படும்!
இரண்டாம் உலகப்போரில் பாரிய அழிவிற்குள்ளான பின்பும் சுதாகரித்து கொண்டு இப்போது உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளுள் ஒன்றாக ஜப்பான் காணப்படுகிறது என்றால் அந்த நாட்டின் அரசும் சரி , அரச தலைவர்களும் , மக்களும் சரி நாட்டின் முன்னேற்றம் என்ற ஒன்றை மாத்திரம் கருத்திற்கொண்டு சுய ஒழுக்கம் , தத்தம் கடைமைகளை தாமே செய்தல் , நேர்த்தியாக தொழில் புரிதல் போன்ற அடிப்படை விடயங்களை சரிவர பின்பற்றியிருக்க வேண்டும். இல்லை சரிவர பின்பற்றுகிறார்கள்!
உலக கிண்ணத்தில் தாம் வெளியாகிவிட்ட பின்பும் தமது உடைமாற்றும் அறையை அது எவ்வாறு வழங்கப்பட்டதோ அவ்வாறே சுத்தம் செய்து "நன்றி ரஸ்யா" என எழுதி வைத்து விட்டு சென்றது ஜப்பானின் ஒழுக்கத்தையும் அவர்கள் ஜப்பானிய பிரஜைகளாக செதுக்கப்பட்டிருப்பதையும் பறைசாற்றுகின்றது! காற்பந்து உலக கிண்ணத்தில் இருந்து தமது அணி பாரிய போராட்டத்தின் பின் வெளியேறிய போதும் நிதானம் இழக்காமல் தோல்வியின் பிடியில் சிக்கி ஒழுக்கமீறலில் ஈடுபடாமல் மைதானத்தில் போடப்பட்ட குப்பைகளை அள்ளி மைதானத்தை சுத்தம் செய்த ஜப்பான் இரசிகர்கள் ஜப்பானியர் சரிவர நெரிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு ஓர் சான்று!
இலங்கை பங்களாதேஷ் அணிகள் மோதிய போட்டியில் பங்க்காளதேஷ் அணிக்கு ஒரு நோபோல் வழங்கப்படாத போது இலங்கை மைதான கதவுகளை உடைத்து நொறுக்கினார்கள் பங்காளிகள். 1996 இல் தமது அணி தோல்வியுறபோகின்றது என்ற நிலை ஏற்பட்ட போது மைதானத்தை கொழுத்தினார்கள் இந்திய இரசிகர்கள்! இலங்கை அணி கிரிகெட் இல் சரிவு சந்தித்து இக்கால பகுதியில் ஓர் போட்டியில் இலங்கை அணி மிக மோசமாக விளையாடிய போது இலங்கை இரசிகர்கள் போத்தல்களை மைதானத்தில் வீசியது மாத்திரம் அல்லாமல் மைதானத்திற்கு வெளியேயும் போராட்டங்களிலும் ஈடுபட்டு ஓர் இழிவான செயலை செய்திருந்தனர். இது அபிவிருத்தி அடைந்து வரும் ஆசிய நாடுகள் சிலவற்றின் சிறந்த சாதனைகள்! மேல கூறப்பட்டது அபிவிருத்தி அடைந்த ஜப்பானின் சாதனை!
ஜப்பானின் சாதனைக்கு காரணமானது அதை ஆண்ட ஆளும் தலைவர்களாகதான் இருக்க வேண்டு். இலங்கை இந்திய பங்காளிகளின் சாதனைக்கும் அவர்களின் தலைவர்கள் தான் காரணமாக இருக்க வேண்டும்!
பல கோமாளிகளாலும் , தகுதியற்ற தலைவர்களாலும் ஆளப்படுவதால் என்னவோ தெரியவில்லை இம்மூன்று நாடுகளும் இன்னும் அபிவிருத்தியடைவில்லை! தகுதியான திறமையானவர்களால் ஆளப்படுவதால் என்னவோ தெரியவில்லை ஜப்பான் உலக நாடுகளில் தலைநிமிர்ந்து தன்மானத்துடன் காணப்படுகின்றது!
"ஒழுக்கம் ஓர் சமூக அலகின் கீழ் நிலையில் உள்ள பாமர மகனிடம் இருந்து வளர்வது அல்ல மாறாக அதன் தலைவனிடமிருந்தே அவ்வலகில் அவனின் கீழ் வாழும் ஏனையோரிடம் கொண்டுசெல்லப்படல் வேண்டும்!"
மைத்திரி மகிந்தவின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த வாழும் இலங்கையரிடம் எங்ஙகனம் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும்?
-Sajeeth Raheem-
0 Comments