வரும் முன் காப்போம்
கல்பிட்டியில் சில நாட்களாக கடுமையாக மழை பெய்ததால் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியது,தற்போது வெள்ள நீர் வழிந்தோடி வருகிறது சில இடங்களில் வெள்ள நீர் வழிந்தோட முடியாத வாரு தேங்கி நிற்பதையும் காணமுடிகிறது,தற்போது நுளம்பின் பெருக்கமும் அதிகரித்துள்ளது,
ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பு நாங்கள் டெங்கு நோய்க்கு முகக்கொடுக்க நேர்ந்தது அதனால் சில உயிர்களையும் பழி கொடுக்க நேர்ந்தது யாவரும் அறிவீர்கள் அதனால் இன்னும் ஒரு அனர்தத்துக்கு முன்னதாக டெங்கு நுளம்பு பரவாதவாரு தேங்கி நிற்கும் நீரில் மருந்துகளை இடுவதன் மூலமாகவும் புகை ,ஊர் தழுவிய சிரமதானம்,மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதன் மூலமாகவும் இப்பாரிய உயிர் கொள்ளி நோயை எம் ஊருக்குல் வர விடாமல் தடுப்போம்,சென்ற முறை டெங்கு காய்ச்சலுக்கு பெரிய அளவில் முகம் கொடுத்த மண்டலக்குடா,ஆனவாசல்,சின்னக ்குடியிருப்பு,பகுதிகள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு வெள்ள நீர் ஆங்காங்கே தங்கியுள்ளது.
சென்ற முறை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக,ஒருபக்கம் பிரார்த்தனை,நோன்பு போன்ற மத கடமைகளில் ஈடுபட்டதோடு மறுபக்கம் சிரம தானங்கள் சட்ட நடவடிக்கைகள்,மூலமாக கடுமையாக போராடி அல்லாஹ்வின் உதவியால் வெற்றி பெற்றோம்.
ஆகவே சிரமங்களை தவிர்க்கும் முகமாக இன்றே ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
நன்றி
ரிஸ்வி ஹூஸைன்.
0 Comments