மழை காரணமாக கல்பிட்டியில் டெங்கு அபாயம்.
கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக கல்பிட்டி பிரதேசத்தில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் நீர் தேங்கும் பகுதிகளையும் நீர் தேங்கும் பொருட்களையும் முறையாக அகற்றும் படி கல்பிட்டி வைத்திய சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர் வரும் ஜூன் 07,ஆம்,8ஆம் திகதிகளில் கல்பிட்டி பகுதியில் டெங்கு நுளம்புகள் பரவுவதை தடுக்கும் முகமாக வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யப்படள்ளது,
ஆகவே உங்கள் வீடுகளையும்,சுற்றுப்புற சூழலையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்,டெங்கு பரவும் இடங்கள் கண்டு பிடிக்க பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கபடவுள்ளது.
-Rizvi Hussain-
-Rizvi Hussain-
0 Comments