Subscribe Us

header ads

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்கினை தனியார் துறையை துறையினரே வழங்குகின்றனர் - அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் அமைச்சர் ரிசாத் (படங்கள்)


பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் வைபவம்  2018.05.30 ம் திகதி அன்று மிக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.


உலகை மாற்றுவதற்கான முதல் சக்தி, கல்வி அறிவு எவருக்கு நல்ல கல்வி அறிவு ஞானம் இருக்கிறதோ அவர்கள் எந்த துறையில் பயணித்தாலும் வெற்றி பெறுவது நிச்சயம் இந்த அடிப்படையில் பம்பலப்பிட்டி அமேசன்  உயர்கல்வி நிறுவனம் சுமார் ஐந்து வருடங்களாக ஏனைய கல்வி நிறுவனங்களை விடவும் மாறுபட்ட முறையில் தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..


அமேசன் உயர் கல்வி நிறுவனமானது பலரால் பாராட்டப்பட்டு வருவதோடு பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் 30 ஆம் திகதி மே மாதம் கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் (BMICH)  தனது வருடாந்த பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்கள் வழங்கி கொளரவிக்கப்ட்டமை ஒரு விசேட அம்சமாகும்..


வெறுமனே புத்தகக் கல்வியை மட்டும் மையமாக கொள்ளாமல், மாணவர்களுக்கிடையே

சுய வேலைத்திட்டங்கள், (Individual Project)பயிற்சி பட்டறைகள்  (practical workshops), வெளி நாட்டு மாணவர்களுடன் தொடர்பாடல்,(Foreign Students exchange), பல உள்நாட்டு நிறுவனங்களுடன்  ஒப்பந்தங்களை  கைசாத்தி, மாணவர்களுக்கு Individual Training  போன்றவற்றை வழங்கி தொழில் சந்தைக்கு ஏற்றவாறு தயாரித்து அனுப்புகின்றமை விசேட அம்சமாகும்...

எதிர்வரும் ஆண்டுகளில் உலகிலேயே அதிகமாக தேவைப்படுகின்ற தொழிற்துறையான Robertic Engineering,Greenz Technology, solor Technology, hybrid technology, Cloud Computing, Automated System, Mobile Technology, Wireless technology, போன்ற துறைகளுடன் தொடர்புடைய பாடநெகளையும் வெகுவிரைவில் ஆரம்பிக்க உள்ளது என அதன் நிறைவேற்று பணிப்பாளர் திரு.இல்ஹாம் மரிக்கார் தனது வரவேற்புறையில் குறிப்பிட்டார்...


இப் பட்டமளிப்பு விழாவில் சுமார் 120 மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

 இதில் உளவியலும் உளவளத்துணையும், ஆசிரியர் பயிற்சி நெறி, தொலை தொடர்பாடல்,

 (Tele communication), தகவல் தொடர்பாடல் மொழி நுட்பம், (Information Technology)

(Business management), 

கணக்கியல் (Accounting), இதுபோன்ற பல துறைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தது.


இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வர்த்தக கைத்தொழில் அமைச்சர்,மற்றும் பொருளியலாளர் திரு. றிஸாட் பதியுதீன் அவர்கள் கலந்து கொண்டதோடு அவருடைய உரையில் எமது நாட்டிலுள்ள பல வளங்களை இன்னும் சரியாக நிர்வகிக்க முடியாத நிறை  காணப்பட்டு வருகின்றது எனவும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டுக்கு புதிய துறைகளை கற்ற துறை சார்ந்தவர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள்.

இதனை அரசாங்கத்தினால் மற்றும் செய்துவிட முடியாது எனவும் 

இன்று இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்கினை தனியார் துறையை துறையினரே வழங்கி வருகின்றனர்.


அந்தவகையில் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின்  சேவை உண்மையில் பாராட்டத்தக்கது எனவும் தன்னுடைய உறையை வழங்கிச்சென்றார்.


இந்நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக முன்னால் புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி அவர்களும், மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ் அவர்களும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதவான் மொஹமட் நவாஸ் அவர்களும், வருகை தந்த்தோடு விசேட அதிதிகளாக முன்னால் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் எஸ். சந்திரசேகரம் ஆகியவர்களும் கலந்து

சிறப்பித்து மாணவர்களுக்கு பல பயனுள்ள கருத்துக்களை வழங்கினார்கள்.


மேலும் அமேசன் கல்வியுடன் இணைந்து தொழிற்புரியும் பிராந்திய இணை கல்வி நிறுவனங்களாவன..


வவுனியாவில் ICC,

யாழ்ப்பாணத்தில் IPDP,

புத்தளத்தில் Isoft College,

சிலாபத்தில் Chilaw International school,

மாத்தரையில் CCAS Campus,கின்னியாவில் KBS,கொலன்னாவையில் Mia Academy,கண்டியில்  Hi- tech College,அக்கரைப்பற்றில் Icps,

 வவுனியாவில் NMMC,

சம்மாந்துறையில் CPS,கொழும்பு 06 இல் JMR Academy

ஆகிய அமைப்புகளின் நிறுவனகளும் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும்.


மேலும் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சர்வதேச அமைப்புகளின் வெளிநாட்டுப் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.


இதில் பங்குபெற்ற அனைத்து அதிதிகளுக்கும், சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும்,மற்றும் அனைத்து விரிவுரையாளர்களுக்கும் விசேட நினைவுச்சின்னம் அமேசன் உயர் கல்வி நிறுவத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்...













Post a Comment

0 Comments