Subscribe Us

header ads

வெள்ளப் பேரிடர் எம்மை எல்லாம் நிர்க்கதிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது - உதவிகளுக்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள்



ஒவ்வொரு வருடமும் வெள்ளப் பேரிடர் எம்மை எல்லாம் நிர்க்கதிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.. இயற்கைக்கு நாம் கடுமையாய் பாவம் செய்திருக்க வேண்டும்.சரியாய் சொல்லி வைத்தது போல ஒவ்வொரு வருடமும் மே மாதம் வெள்ளம் என்ற பேரிலும் மண் சரிவு என்ற பேரிலும் தனது கணக்கை ராட்சதத் தனமாய் தீர்த்துக் கொள்கிறது..

மனித சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கையின் திருவிளையாட்டுடன் பலவீனத்தின் மொத்த உருவமான அற்ப மனிதர்களான எமக்குப்போட்டியிட முடியாது..

ஆனால் இப்பேர்பட்ட அனர்த்தங்களை அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்புக்களோட குறைக்க முடியும்..கடந்த வருடத்தின் புள்ளி விபரங்களைப் பெற்று இது போன்ற நாட்களில் மக்களை அறிவிருத்தி இருக்க முடியும்..இதெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டிய கருமங்கள்..

இப்போது அனர்த்தம் ஏற்பட்டு இருக்கிறது.. செயல்படாத முடக்குவாத அரசைப் பற்றிப் பேசுவதில் பலனில்லை.. எமது உறவுகள் பாதிக்கப்ப்ட்டு இருக்கிறார்கள்.. 

இயற்கைக்கு எந்தவித ஜாதி மத பேதமும் இல்லை.. அது சரியான கண்டிப்பான வாத்தியார். தனது அருட்கொடைகளை மட்டுமல்ல அட்டகாசங்களையும் சரிசம விகிதத்தில் எந்தவித பேதமும் இன்றி வழங்கித் தீர்க்கிறது.. இப்போதைய பேரவலத்திலும் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க இருபது பேர் அளவில் பலியாகி இருக்கின்றனர். இவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், போத்தலில் அடைக்கப்பட்ட சுத்தமான குடிநீர்,மற்றும் பனடோல் உட்பட மருந்துப் பொருட்கள் தேவைப்படுகின்றன...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்தவருடத்தைப் போலவே நாங்கள் உதவத் திட்டமிட்டு இருக்கிறோம்.. பரோபகார உள்ளங்கள் உங்களது உதவிகளை எமக்குத் தாராளமாய் தந்து உதவுமாறு தயவாய் கேட்டுக் கொள்கிறோம்...

நன்றி...


தொடர்புகளுக்கு  Amheswaran

Post a Comment

0 Comments