சைவர்களும் பெளத்தர்களும் வாழும் நாட்டில் மாட்டிறைச்சிக் கடை ஏன் ? என்று சுலோகங்கள் ஏந்தி இருக்கிறது சாகவச் சேரி இந்துத்துவா ப்ராஞ்ச்..
நேற்று இறைச்சிக்கடைக்குப் போய் இருந்தேன்..விற்பனை சூடு பிடித்து பரபரப்பு எல்லாம் ஓய்ந்து போன நிலையில் ஒருவர் ஈரல் ஒரு கிலோ கேட்டார்..அப்போது எங்கோ இருந்து ஓடி வந்த சிங்களக் கர்ப்பிணிப் பெண்மணி தனக்கும் ஈரல் ஒரு கிலோ வேண்டும் என்றார்.இருப்பதோ சொற்பம், யாராவது ஒருவருக்குத்தான் தரலாம் என்றார் கடைக்காரர்." தனக்கு மருத்துவர் ஈரல் சாப்பிட சொல்லி இருப்பதாய் கேட்காமலே படபடவென விஞ்ஞான விளக்கம் சொல்லத் தொடங்கினார் அந்தப் பெண்". ஆரம்பத்தில் ஈரல் கேட்டவர் சிரித்தபடியே விட்டுக் கொடுத்தார்..
நாட்டில் மாட்டிறைச்சியை அதன் பார்ட்ஸ்களை உண்ண முஸ்லிம் அல்லாத ஒரு பெரும் கூட்டம் வரிசைகட்டி நிற்பதெல்லாம் இறைச்சிக் கடை முதலாளிகள் தினமும் காணும் சங்கதி..இந்நிலையில் இலங்கைக்கு இடது காலை எடுத்து வைத்திருக்கும் மனித குல விரோத இந்துத்துவா கும்பல் 1915 ஆம் ஆண்டு கலவர கால இத்துப் போன மாட்டிறைச்சிக் கோஷத்தை எழுப்பி இருக்கிறது..இறைச்சி வைத்திருப்பதற்கு மனிதர்களை அடித்துக் கொன்றால் அதை லைக் செய்வார்கள் .இவ்வளவுதான் மனிதாபிமானம்...
இது வெறும் மாட்டிறைச்சிக் கோஷமாய் தெரியவில்லை..குடிகாரப் பதர்கள் போல இருக்கிறார்கள்..நாடெங்கும் இருக்கும் சட்டவிரோத மதுபான நிலையங்களுக்கு எதிராகவோ தெருவுக்கு தெரு முளைத்து கிளம்பி இருக்கும் மசாஜ் செண்டர்களுக்கு எதிராகவோ பேச வக்கற்ற மாட்டு மூத்திரக் குப்பன்களும் சுப்பன்களும் சிங்களக் காவிக் கும்பலுடன் கைகோர்த்து இயங்குகிறார்கள்.. இந்தக் கும்பல் இன்னொரு கலவரத்திற்கு தூபம் இடுவதெல்லாம் யாரும் அறியாமலில்லை.
வடக்கு கிழக்கு மாகாண மக்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் முகம் கொடுக்கப்போகும் மிகப் பெரும் சவாலாக இந்த இந்துத்துவா பயங்கரவாதம் இருக்கப் போகிறது..ஒன்று இனி வரும் புதிய அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.அல்லது மனித நேயத்தை விரும்பும் மக்கள் இந்தக் கும்பலை காலால் மிதித்து நசுக்க வேண்டும்
-Zafar Ahmed-
0 Comments