Subscribe Us

header ads

டிஜிட்டல் திண்ணையில் தானாகவே ஏறி உட்கார்ந்து ட்ரெண்ட் ஆகி இருக்கிறது ஒரு கிழட்டுப் பக்கி - சச்சிதானந்தமாம்


தற்போது டிஜிட்டல் திண்ணையில் தானாகவே ஏறி உட்கார்ந்து ட்ரெண்ட் ஆகி இருக்கிறது ஒரு கிழட்டுப் பக்கி..பெயர் ஏதோ சிவசேனையின் சச்சிதானந்தமாம்..ஆர் எஸ் எஸ் இன் இலங்கை ஏஜெண்ட்..நல்ல கொழுத்த சம்பளத்தில் பெரிய அண்ணன் தேசம் கவனிக்கிறது போலும்..எதிர்காலத்தில் ஒரு நாள் இந்திய தூதரகத்தின் ஆவணங்கள் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் லீக்காகினால் அதில் இந்த சச்சிதானந்தத்திற்கும் பரிவாரங்களுக்கும் காவித் தீவிரவாதிகளால் என்ன என்ன கட்டளைகள் கொடுக்கப்பட்டிருந்தன என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிடும்...

கடைசிகாலத்தில் புண்ணியம் செய்து செத்துப் போகாமல் உபத்திரவம் செய்து ஏழு பரம்பரைக்கும் ஏச்சு வாங்கிக் கொடுக்க கிளம்பி இருக்கும் இந்த சச்சிதானந்தம் போன்றோருக்கு வழங்கப்படும் முக்கிய டாஸ்க் ' நீ பிரச்சினையைத் திசை திருப்பு ' என்பது தான்..இந்த டாஸ்க்கை வழங்கும் பிக் பாஸ் யார் என்று தான் மில்லியன் டாலர் கேள்வி..அவர் அதை எந்த மொழியில் வழங்குகிறார் என்று தெரியவில்லை..எப்படியோ ஒரு பிக்பாஸ் சச்சிதானந்தம் போன்றோரை விளையாடவிட்டு டாஸ்க் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்....

நினைவேந்தலில் பங்கு கொண்ட கிளிநொச்சி கிளையின் இரண்டு ஊழியர்களை HNB நிர்வாகம் நீக்கியிருக்கும் நிலையில் அதுபற்றி ஒரு வசனமும் பேசாது மாட்டிறைச்சியைப் பற்றி இந்த ஓநாய் அழுது புலம்புவது ஏன்..ஐந்து இலக்கங்களில் ஆறு இலக்கங்களில் சம்பளம், போனஸ், வாகனங்கள், வசதிகள் என்று சகல செளபாக்கியங்களுடன் சமூகத்தில் எவனுக்கும் கை நீட்டாது தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்களுக்குத் திடீரென்று ஒரே இரவில் தொழிலற்றுப் போனால் அதைப் போன்ற பொருளாதார இழப்பை அதையும் தாண்டிய மனப்பிறழ்வை யாரால் ஈடு செய்ய முடியும் ? அத்தனை பெரும் தமிழுணர்வு இருந்தால் இந்த ஆர் எஸ் எஸ் கூட்டம் மாட்டைக் குளிப்பாட்டிக் கொண்டாட முன்பு இதை அல்லவா பேசு பொருளாக்கி இருக்க வேண்டும் ?

இந்த சிவ சேனையோ மயிரோ கடந்த காலங்களில் பொதுபல சேனா உடன் நட்பில் இருந்தது..ஞானசார உருகி உருகி காதலித்தார்.பொதுபல பிரதிநிதிகளுடன் இந்த சிவசேனை இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தன.இப்போது அண்ணன் ஞானத்திற்கு ஏதோ போதாத காலமாம்.நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் குற்றவாளி என்று ஹோமாகம நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டதாம்.ஜுன் 14 ம் திகதி நான்கு வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.அடடா..நம்பலமா ? ..ஏதோ ஐரோப்பா தேசம் போல இருக்கிறது..எப்படியோ அண்ணனின் கைதை திசை திருப்ப தம்பி சச்சிதானந்தம் கொஞ்சம் முக்கி முணகிப் பார்க்கிறார் போலும்..

எதற்கெடுத்தாலும் ' சைவரும் பெளத்தரும் ' வாழும் நாட்டில் என்று திருவாய் மலர்கிறார்..முதலில் இந்த ஜந்து இலங்கை சரித்திரத்தைப் படிக்க வேண்டும்.....

மிஸ்டர் சச்சிதானந்தம் ! இலங்கை சரித்திரம் உன் போன்ற மலம் தின்னிகளுக்கு மட்டுமல்ல பெரும் பெரும் தமிழ் தலைவர்கள் என்று கொண்டாடப்பட்டவர்களுக்கும் ஒரே அகப்பையால் தான் பங்கீடு செய்து இருக்கிறது..பொன்னம்பலம் இராமநாதனின் சரித்திரத்தைப் படித்துப் பார்..1915 சிங்கள முஸ்லிம் இனக் கலவரத்தின் போது கைது செய்யப்பட்ட அநாகரிக தர்மபால உட்பட சிங்களத் தீவிரவாத தலைவர்களைக் காப்பாற்றி விடுதலையடைய வைத்த பெரும் சட்டத்தரணி..எமது சமூகக்கல்வி பாடத்தில் இந்த சிங்கள அடிவருடியை பெரும் தலைவர் என்கிறார்கள்.இருக்கட்டும்..அவர் இல்லாவிட்டால் அன்றைக்கு யாரும் சிறையில் இருந்து வெளியே வந்து இருக்க முடியாது.அப்பேர்பட்ட ஆளினதும் பிட்டத்தில் காறி உமிழ்ந்து ' பிரிவினைவாதி ' என்று செம்முத்திரை குத்தியது சிங்களம்.உன்னையும் பாவித்து முடித்த பின் உனது வாய்க்குள் பெரிசாய் ஒன்றைத் திணிக்கும்..அப்போது நீயும் உனது கபோதி வட்டமும்..இலக்கியம் என்ற பேரில் கம்பு சுத்தும் ஆர் எஸ் எஸ் ஏஜெண்டுகளும் முகத்தைக் கொண்டு போய் எந்தப் பசுவின் சாணியில் தேய்க்கப் போகிறீர்கள் என்று பார்ப்போம்..

Post a Comment

0 Comments