Subscribe Us

header ads

சட்டத்தை கையில் எடுத்தவர்களை தண்டிக்கும் திராணி இவ்வரசுக்குள்ளதா..?


அம்பாறையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் திராணிஇவ்வரசுக்குள்ளதா என  பானதுறை முன்னாள் பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுஹான்கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவம் ஒன்று அம்பாறை நகரில்பதிவாகியுள்ளதுஇது இனங்களுக்கிடையிலான பிரச்சினை என்பதை விடஅரசியல் காய்நகர்த்தலின் ஒரு அங்கம் எனலாம்முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடையகாலத்தில் அளுத்கமை சம்பவம் ஒன்றே முஸ்லிம்களுக்கு எதிரான நடைபெற்றிருந்தது.இந்த நல்லாட்சி அரசில் பல அளுத்கமை போன்ற சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன.முஸ்லிம்களின் ஆதரவு என்னவோ இவ்வரசுக்குத் தான் உள்ளது.

நேற்று அம்பாறையில் இடம்பெற்ற சம்பவம் நன்கு திட்டமிடப்பட்டதுஅக் கடைக்குஅருகாமையில் காவல் நிலையம் அமையப்பெற்றிருந்த போதும் அவர்கள் அதனைபாதுகாக்க முடியவில்லைஇதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை குற்றம்சுமத்த சிலர் வருவார்கள்.  இன்றும் காவல் நிலையங்களுக்கு உத்தரவிடும் அதிகாரம்முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்குள்ளதாஇது போன்று தான்கிந்தோட்டைகலவரத்தின் போதும் பாதுகாப்பு படை அதிகாரிகள் இனவாதிகளுக்கு ஆதரவுவழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு இடம்பெற்றிருந்த கிந்தோட்டை கலவரம் உட்பட முஸ்லிம்களுக்கு எதிரானவன்முறைகளுக்கு  நீதியை நிலை நாட்டியிருந்தால்இவ்வாறான சம்பவங்களைசெய்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கலாம்இதுவரை இந்த அரசு எடுத்தஉருப்படியான ஒரு நடவடிக்கையையாவது குறிப்பிட முடியுமாஇவ்வாறான நிகழ்வுகளில்போதுஇனவாத வன்முறைகளை கையில் எடுத்தவர்களை விட்டு விட்டுமுக நூலில்பதிவிட்ட ஒரு முஸ்லிம் வாலிபரே தண்டிக்கப்பட்டுள்ளார்இதுவே இவ்வரசு நீதியை நிலைநாட்டும் விதமாகும்.

என்னை பொறுத்தமட்டில் அளுத்கமை சம்பவத்துக்கு கூடநீதியை நிலை நாட்டும் கடமைஇவ்வரசுக்குத் தான் உள்ளதுஅது இடம்பெற்று முடிந்த சில மாதங்களிலேயே முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருந்ததுஇவ்வாறானவன்முறைகளில் ஈடுபடும் யாராக இருந்தாலும்எந்தவிதமான தயவுக்களுமின்றிகடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தல் வேண்டும் என குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments