Subscribe Us

header ads

இனவாதிகளின் முழுமையான கூடாரமாக மாறிவிட்ட ஐக்கிய தேசிய கட்சி ..


இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஜிஹாத் எனும் நூலை வெளியிட்டு,இனவாதத்தை விதைத்ததில்  முதன்மையானவரான சம்பிக்க ரணவக்க  தலைமையில்ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டம் நடந்திருப்பதானதுஐக்கிய தேசியகட்சியானது இனவாதிகளின் முழுமையான பிடிக்குள் சென்றுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

 ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டமானதுஅமைச்சர் சம்பிக்க ரணவக்கதலைமையில் இடம்பெற்றுள்ளதுஇந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க தான்இனவாதிகளின் தந்தைஇன்றுஅதிகமாக துள்ளிக்கொண்டிருக்கும் ஞானசார தேரரின்உள்ளங்களில் இனவாத சிந்தனைகள் பெருக்கெடுக்கஇவர் அந் நேரத்தில் வெளியிட்டுவந்த கருத்துக்களும் காரணமாக அமைந்திருக்கலாம்ஞானசார தேரர் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஒரு காலத்தில் ஒன்றாக பயணம் செய்தவர்கள்அதனை,அவர் தனது வாயாலேயே ஏற்றுக்கொண்டுமுள்ளார்.

இன்றும்இவர் தான்ஞானசார தேரரை இயக்குகுறாரா என்ற பலத்த சந்தேகம் உள்ளது.அளுத்கமை கலவரத்தை தொடர்ந்துமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஞானசாரதேரரை கைது செய்ய தயாரான போதுஅதனை இவரே தடுத்து நிறுத்தியதாக முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பகிரங்க குற்றச் சாட்டுக்களை முன் வைத்துமுள்ளார்.இப்படியான ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை நடாத்தும் அளவு,அக் கட்சியினுள் பலமிக்கவராக திகழ்கிறார்.

இதில் கவலையான விடயம் என்னவென்றால்ஐக்கிய தேசிய கட்சியானதுஇனவாதிகளின் முழுமையான பிடிக்குள் சென்றுள்ள போதும்எமது முஸ்லிம் மக்கள்,அதிகம் ஐக்கிய தேசிய கட்சியையே ஆதரிக்கின்றனர்இன்னும்முஸ்லிம் மக்கள் ஐக்கியதேசிய கட்சியை ஆதரிப்பார்களாக இருந்தால்முஸ்லிம்கள் மிகக் கடுமையானவிளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிப்பதானது , தங்களதுதலைகளை தாங்களே பொறிக்குள் வைத்துள் கொள்வது போன்றாகும்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஜனாதிபதியாகும் ஆசையில் இனவாதத்தை மிகவும்நிதானமாக கையாண்டு வருகிறார்இருந்தாலும்இடைக்கிடையே ஏதேனும்சொல்லிக்கொண்டே இருப்பார்இன்றுஅவர் பெரும் இனவாதியாக தோன்றாமல்இருக்கலாம்அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழுகூட்டத்தை நடாத்தியுள்ளார் என்பதற்கும் ஞானசார தேரர் ஐக்கிய தேசிய கட்சியின்மத்திய குழு கூட்டத்தை நடத்தியுள்ளார் என்பதற்கும் இடையில் எந்த வேறுபாடுமில்லை.எதிர்வரும் தேர்தலில் கட்சி சிந்தனைகளை மறந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்துஐக்கிய தேசிய கட்சியை எதிர்த்து பாடம் புகட்ட வேண்டும்.

 அஹமட்,
ஊடக செயலாளர்,
முஸ்லிம் முற்போக்கு முன்னனி.

Post a Comment

0 Comments