Subscribe Us

header ads

கல்பிட்டி அல் -அக்ஸா தேசிய பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் அமைதியாக நடைபெற்று வருகிறது



இம்முறை கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் ஆரவாரம் இல்லாமல் அமைதியாக சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன,சில போட்டிகள் நடைபெற்று முடிவடைந்ததும் உள்ளன,மெய்வல்லுனர் போட்டிகள் இன்ஸா அல்லாஹ் எதிர் வரும் திங்கள்கிழமை (29-01-2018) நடைபெறவுள்ளதோடு இறுதி போட்டிகள் 01-02-2018 வியாழக்கிழமை பி.ப.2.00 மணிக்கு சிறப்பான முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதற்கான பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொள்வதை நேற்று அவதானிக்க முடிந்தது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் புள்ளிகளின் அடிப்படையில் முதலாம் இடத்தில் மக்கா இல்லமும்,இரண்டாம் இடத்தில் ஜெரூஸலம் இல்லமும்,மூன்றாம் இடத்தில் மதீனா இல்லமும்,காணப்படுகின்றன,பார்ப்போம் மேலும் பல போட்டிகள் நடைபெறவுள்ளன இறுதியில் முன்னிலை பெறப்போகும் இல்லம் எது என்று ?

-Rizvi Hussain-








Post a Comment

0 Comments