Subscribe Us

header ads

அமைச்சு பதவி தருகிறேன் வாருங்கள் என ஜனாதிபதி எங்களுக்கு தூது அனுப்புகிறார்.


அமைச்சுப் பதவி தருகிறோம்எங்களோடு வந்து இணையுங்களென சு.கவினர்அழைக்கின்ற போதும்,அவர்கள் உத்தியோக பூர்வமாக ஐக்கிய தேசிய கட்சியுடனானஉறவை முறித்து வெளியேறினால் நாங்கள் மஹிந்த தலைமையில்  அவர்களுடன்இணைந்து கொள்வதற்கு தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன்பெர்னாண்டோ தெரிவித்தார்.

குருனாகலையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சு.கவினர்  மற்றும் .தே.கவினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மக்கள்செல்வாக்கு கண்டு திகைத்து நிற்கின்றனர்.அதனை தடுப்பதற்கு என்னவெல்லாம் வழிகள்இருக்குமோ அத்தனை வழிகளையும் செய்து கொண்டுமிருக்கின்றனர்.பதவி ஆசை காட்டிமுன்னாள் ஜனாதிபதியுடன் உள்ள சிலரை கழற்றுவது,அவர்களது திட்டம்.

அந்த வகையில் சு.காவின் முக்கியஸ்தர் ஒருவர் என்னிடம்தங்களோடு வந்துஇணையுமாறும்அப்படி இணைந்தால் பிரபல அமைச்சுப் பதவி தருவதாகவும்கூறினார்.முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் பயணத்தில் இணைந்திருக்கும் நாங்கள்பதவிபட்டங்களுக்காக அவர்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை.இதனை என்னோடுபேசியவர் நன்கு உணர்ந்திருப்பார்.இதன் பிறகு முன்னாள் ஜனாதிபதியுடன்இணைந்துள்ளவர்களிடம் இப்படியான பேச்சுக்களை பேசும் போதுஅவர் மிகவும்கவனமாக பேசுவார் என்றும் நம்புகிறேன்.

அதன் போது அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி தனித்துஆட்சியமைக்கப்போவதாகவும் கூறினார்.எமது பிரச்சினை என்ன என்பதையும்நாம்எதனை கூறினால் எம்மைஅவர்கள் பக்கம் வீழ்த்தலாம் என்பதையும் நன்குஅறிந்துள்ளார்இவர்களின் வாய் பேச்சை நம்பிநாங்கள் செல்ல முடியாதுஎங்கள்அணியினரது பிரச்சினையே நாங்கள் மிகவும் நேசித்த கட்சியை யானையிடம் அடகுவைத்திருப்பது தான்

இவர்கள் உத்தியோக பூர்வமாக ஐக்கிய தேசிய கட்சியுடனான் உறவை துண்டித்தால்,நாங்கள் அவர்களுடன் இணைந்துகொள்ள தயாராக உள்ளோம்எது எவ்வாறு இருப்பினும்,இது  சு.கவுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் பாரிய பிளவு உள்ளதைஎடுத்துக்காட்டுகிறதுஇவை அனைத்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின்தூய்மையான அரசியல் பயணத்துக்கு சாதகமாகவே அமைந்துள்ளது என அவர்குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments